டேஞ்சர் ஸோனில் பெங்களூரு..! தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா?

Water bengaloru - 2026

தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது பெங்களூரு நகரம். காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடகம் நடந்து கொண்டது. ஆனால், பெங்களூரு நகரையாவது தண்ணீர் தட்டுப்பாடில்லாத நகராக மாற்றினார்களா ஆட்சியாளர்கள் என்றால் அதுதான் இல்லை. பெங்களூரு நகரம் இப்போது கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

அறிவியில் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அமைப்பு வெளியிட்ட தகவலில், முறையான திட்டமிடல் இல்லாததால், பெங்களூருவின் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்த அளவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தில் இருந்து, நான்கு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கான்க்ரீட் கட்டடங்கள் அதிக அளவில் பெருகியதும், நகரம் விரிவாகிக் கொண்டே போவதும், அதன் தேவைக்கு ஏற்ப ஆழ்துளைக் கிணறுகள் அதிகரித்ததும் பெங்களூருவை பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. இதன் காரணத்தால், தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனை போல், பெங்களூரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

குடிநீர் முழுமையாகத் தீர்ந்து போகும் ‘டே ஜீரோ’ நகரங்கள் பட்டியலில், பெங்களூரும் இடம்பெற்றுள்ளது. பெங்களூருவை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரும் நகரான புனேவும் இந்த எச்சரிக்கை நிலையில் உள்ளது. உலக தண்ணீர் தினத்தில் பெங்களூரு பற்றி வெளியாகியுள்ள செய்தி, அந்நகர மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories