டேஞ்சர் ஸோனில் பெங்களூரு..! தண்ணி இல்லா காட்டுக்கு டிரான்ஸ்பர் ஆக வேண்டுமா?

Water bengaloru - 2026

தண்ணியில்லாக் காட்டுக்கு டிரான்ஸ்பர் போட்டுடுவேன் என்று அரசு உயரதிகாரிகள் தங்களுக்குக் கீழ் நிலையில் பணிபுரிபவர்களை மிரட்டுவதுண்டு. இப்போது அந்தத் தலைநகரே தண்ணியில்லாக் காடாகிவிட்டால்..? எங்கே டிரான்ஸ்பரை யாருக்கு போடுவது?

இப்படி ஒரு இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது பெங்களூரு நகரம். காவிரியில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழகத்தில் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த வேளையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடாமல், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் மதிக்காமல் கர்நாடகம் நடந்து கொண்டது. ஆனால், பெங்களூரு நகரையாவது தண்ணீர் தட்டுப்பாடில்லாத நகராக மாற்றினார்களா ஆட்சியாளர்கள் என்றால் அதுதான் இல்லை. பெங்களூரு நகரம் இப்போது கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர்.

அறிவியில் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஆலோசனை வழங்கும் அமைப்பு வெளியிட்ட தகவலில், முறையான திட்டமிடல் இல்லாததால், பெங்களூருவின் நிலத்தடி நீர்மட்டம் மிகக் குறைந்த அளவே இருப்பதாகத் தெரிவித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் ஆழ்துளைக் கிணறுகள் எண்ணிக்கை ஐந்தாயிரத்தில் இருந்து, நான்கு லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

கான்க்ரீட் கட்டடங்கள் அதிக அளவில் பெருகியதும், நகரம் விரிவாகிக் கொண்டே போவதும், அதன் தேவைக்கு ஏற்ப ஆழ்துளைக் கிணறுகள் அதிகரித்ததும் பெங்களூருவை பெரிதும் பாதித்துள்ளதாகக் கூறுகிறது அந்த அறிக்கை. இதன் காரணத்தால், தென்னாப்பிரிக்க தலைநகர் கேப்டவுனை போல், பெங்களூரும் கடும் தண்ணீர் பஞ்சத்தை சந்திக்க வாய்ப்பிருப்பதாக எச்சரித்துள்ளது.

குடிநீர் முழுமையாகத் தீர்ந்து போகும் ‘டே ஜீரோ’ நகரங்கள் பட்டியலில், பெங்களூரும் இடம்பெற்றுள்ளது. பெங்களூருவை அடுத்து மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பெரும் நகரான புனேவும் இந்த எச்சரிக்கை நிலையில் உள்ளது. உலக தண்ணீர் தினத்தில் பெங்களூரு பற்றி வெளியாகியுள்ள செய்தி, அந்நகர மக்களிடையே பீதியைக் கிளப்பியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories