December 6, 2025, 5:43 AM
24.9 C
Chennai

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 1,264 கால் போட்டு காவலரை திட்டியவர் கைது!

ishwarbhoi - 2025

1,264 தொலைபேசி அழைப்புகள் செய்து, போலீஸாரைத் திட்டித் தீர்த்த நபர் குஜராத்தில்  கைது செய்யப் பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் சிட்டி காவல் துறையினரை மோசமாகத் திட்டுவதற்காகவே 1,264 தொலைபேசி அழைப்புகள் செய்துள்ளவரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் கமாட் (Kamod) என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் போய். இவர், போலீசாருக்கு எதிரான உணர்ச்சியை வளர்த்துக் கொண்டுள்ளார். இதை அடுத்து, மனம் போன போக்கில் அகமதாபாத் சிட்டி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கியுள்ளார். பெண் போலீசார் எடுத்தால் அவரது வார்த்தைகள் மேலும் தரக் குறைவாக மாறிவிடும்.

எத்தனை முறை இப்படி இவரிடம் திட்டு வாங்கினார்களோ தெரியாது, போலீஸார் எல்லாம் கடும் கடுப்பில் இருந்துள்ளனர். இப்படி திட்டித் தீர்க்கும் நபரை  கண்டுபிடிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ  நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது.

சில வருடங்களுக்கு முன்பு ஈஸ்வருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவருடைய மனைவி அவரை விட்டு விலகியுள்ளார்.  இந்த ஜோடிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஈஷ்வர் தனியே வசித்து வந்துள்ளார்.

இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 108 அவசர உதவிக்கு இதே போல் கால் செய்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.

“போயிக்கு இரண்டு கைபேசி எண்கள் இருந்தன. அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து திட்டியதுடன், அதன் மூலம் குரூர இன்பம் அடைந்துள்ளார்.  இவரது விவகாரம் குறித்து  காவல் அதிகாரி ஒருவர் கூறியபோது, ஐபிசி பிரிவு 294 பி பிரிவின்படி (வெளிப்படையாக ஆபாச வார்த்தைகளை பேசுவது) அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம், அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories