February 22, 2026, 12:02 PM
29.6 C
Chennai

ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ? 1,264 கால் போட்டு காவலரை திட்டியவர் கைது!

ishwarbhoi - 2026

1,264 தொலைபேசி அழைப்புகள் செய்து, போலீஸாரைத் திட்டித் தீர்த்த நபர் குஜராத்தில்  கைது செய்யப் பட்டுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் சிட்டி காவல் துறையினரை மோசமாகத் திட்டுவதற்காகவே 1,264 தொலைபேசி அழைப்புகள் செய்துள்ளவரை போலீசார் கைது செய்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டம் கமாட் (Kamod) என்ற இடத்தைச் சேர்ந்தவர் ஈஸ்வர் போய். இவர், போலீசாருக்கு எதிரான உணர்ச்சியை வளர்த்துக் கொண்டுள்ளார். இதை அடுத்து, மனம் போன போக்கில் அகமதாபாத் சிட்டி காவல்துறை கட்டுப்பாட்டு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாய்க்கு வந்தபடியெல்லாம் திட்டத் தொடங்கியுள்ளார். பெண் போலீசார் எடுத்தால் அவரது வார்த்தைகள் மேலும் தரக் குறைவாக மாறிவிடும்.

எத்தனை முறை இப்படி இவரிடம் திட்டு வாங்கினார்களோ தெரியாது, போலீஸார் எல்லாம் கடும் கடுப்பில் இருந்துள்ளனர். இப்படி திட்டித் தீர்க்கும் நபரை  கண்டுபிடிக்க போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் புதன்கிழமை அன்று இந்த கால் வரும் ஐஎம்இஐ  நம்பரை வைத்து சம்பந்தப்பட்ட நபரை அடையாளம் கண்டனர். IMEI எண்ணை அடிப்படையாகக் கொண்டு, அவர் நரோலில் ஒரு தொழிற்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் அகமதாபாத்தில் உள்ள கமோட் கிராமத்தைச் சேர்ந்த ஈஷ்வர் போய் (40) என அடையாளம் காணப்பட்டது. அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் துணி ஆலை ஒன்றில் அவர் ஒரு செக்யூரிடி கார்டாக பணிபுரிவதும் தெரியவந்தது.

சில வருடங்களுக்கு முன்பு ஈஸ்வருக்கு திருமணம் நடந்தது. ஆனால் அவருடைய மனைவி அவரை விட்டு விலகியுள்ளார்.  இந்த ஜோடிக்கு குழந்தைகள் இல்லை என்பதால் ஈஷ்வர் தனியே வசித்து வந்துள்ளார்.

இவர், மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் 108 அவசர உதவிக்கு இதே போல் கால் செய்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளார்.

“போயிக்கு இரண்டு கைபேசி எண்கள் இருந்தன. அவர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு விடுத்து திட்டியதுடன், அதன் மூலம் குரூர இன்பம் அடைந்துள்ளார்.  இவரது விவகாரம் குறித்து  காவல் அதிகாரி ஒருவர் கூறியபோது, ஐபிசி பிரிவு 294 பி பிரிவின்படி (வெளிப்படையாக ஆபாச வார்த்தைகளை பேசுவது) அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவருக்கு மூன்று மாதம் வரை சிறை தண்டனை கிடைக்கலாம், அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories