டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது!

ganesh raghu policemen in dgp office - 2026

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை நேற்று  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்தது. இந்நிலையில் இன்று இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ganesh raghu policemen trying to selfmolested - 2026

அப்போது அவர்கள், ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் சாதி ரீதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தங்களைப் பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதுடன், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுப்பு கேட்டால் கூட தராமல், தங்களுக்கு மது வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இந்தக் காரணங்களால் தாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தன்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் கவனித்து, ஓடிச் சென்று தடுத்தனர். பின் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூறிய டிஜிபி அலுவலக அதிகாரிகள்,  இவர்கள் இருவரும் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தெரிவித்த மற்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்றும் கூறினர்.

இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் மெரினா காவல் நிலைய போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

Topics

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதி; இன்று அறிவிக்கிறது ஆணையம்! 

சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை மார்ச் 15 ஞாயிறு இன்று இந்தியத் தேர்தல் ஆணையம் மாலை 4 மணிக்கு அறிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Entertainment News

Popular Categories