February 22, 2026, 1:50 PM
29.6 C
Chennai

டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது!

ganesh raghu policemen in dgp office - 2026

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை நேற்று  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்தது. இந்நிலையில் இன்று இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ganesh raghu policemen trying to selfmolested - 2026

அப்போது அவர்கள், ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் சாதி ரீதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தங்களைப் பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதுடன், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுப்பு கேட்டால் கூட தராமல், தங்களுக்கு மது வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இந்தக் காரணங்களால் தாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தன்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் கவனித்து, ஓடிச் சென்று தடுத்தனர். பின் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூறிய டிஜிபி அலுவலக அதிகாரிகள்,  இவர்கள் இருவரும் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தெரிவித்த மற்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்றும் கூறினர்.

இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் மெரினா காவல் நிலைய போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

Topics

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories