December 6, 2025, 6:29 AM
23.8 C
Chennai

டிஜிபி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற காவலர்கள் இருவரும் கைது!

ganesh raghu policemen in dgp office - 2025

சென்னை டிஜிபி அலுவலக வளாகத்தின் வெளியே தேனி மாவட்டத்தைச் சேர்ந்த ஆயுதப் படைக் காவலர்கள் கணேஷ் (28), மற்றும் ரகு(29) ஆகியோர் புதன்கிழமை நேற்று  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இந்தச் சம்பவத்தால் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விவகாரம் அரசியல் மட்டத்திலும் பெரும் விவாதத்தைத் தோற்றுவித்தது. இந்நிலையில் இன்று இருவரும் கைது செய்யப் பட்டுள்ளனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த காவலர்கள் இருவரும் தேனி மாவட்டம், ஆயுதப்படை ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ganesh raghu policemen trying to selfmolested - 2025

அப்போது அவர்கள், ஆய்வாளர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இருவரும் சாதி ரீதியாக செயல்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்தனர். மேலும், தங்களைப் பணி செய்யவிடாமல் துன்புறுத்துவதுடன், தேவையில்லாமல் பணியிட மாற்றம் செய்வதாகவும், விடுப்பு கேட்டால் கூட தராமல், தங்களுக்கு மது வாங்கிக் கொடுக்கச் சொல்லி ஆய்வாளர் சீனிவாசன் வற்புறுத்துவதாகவும், இந்தக் காரணங்களால் தாங்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாகவும் குற்றம் சாட்டினர்.

பின்னர் திடீரென அவர்கள் இருவரும் தன்கள் கைகளில் வைத்திருந்த மண்ணெண்ணெயை ஊற்றி  தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதனை அப்பகுதியில் நின்றிருந்த காவலர்கள் கவனித்து, ஓடிச் சென்று தடுத்தனர். பின் இருவரும் டிஜிபி அலுவலகத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு அறிவுரை கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் இந்தச் சம்பவம் தொடர்பாகக் கூறிய டிஜிபி அலுவலக அதிகாரிகள்,  இவர்கள் இருவரும் பணியில் ஒழுங்கீனமாக செயல்பட்டதால் இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், இவர்கள் தெரிவித்த மற்ற குற்றச்சாட்டுகள் எல்லாம் தவறானவை என்றும் கூறினர்.

இந்நிலையில், ஆயுதப் படை காவலர்கள் கணேஷ், ரகு இருவரும் மெரினா காவல் நிலைய போலீஸாரால் இன்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories