சென்னை : புதுச்சேரியில் பா.ஜ.க,வினர் 3 பேர் நியமன எம்.எல்.ஏ.,க்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
புதுச்சேரி சட்டசபையில் பா.ஜ.க,வைச் சேர்ந்த செல்வகணபதி, சாமிநாதன், சங்கர் ஆகிய 3 பேரையும் நியமன எம்.எல்.ஏ.,க்களாக மத்திய அரசு நியமித்தது. இதனை எதிர்த்தும், நியமன எம்.எல்.ஏ.,க்களின் நியமனம் செல்லாது என அறிவிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதுச்சேரி அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, எம்.எல்.ஏ.,க்கள் நியமனம் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.