11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் முன்னணி சுழல்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார்.
சென்னை அணியில் ஏலம் எடுக்கப்பட்ட உடனே ஹர்பஜன் சிங் தனது மகிழ்ச்சியை வெளிகாட்டும் வகையில் டுவிட்டரில் தமிழில் ஒரு பதிவு செய்திருந்தார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது:-
நான் வந்துட்டேன்னு சொல்லு
தமிழின் அன்பு உடம்பெறப்பெல்லாம் எப்புடி இருக்கீக மக்கா.
உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, “வீரமா”, காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”
தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!!
இவ்வாறு ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.