பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!

IMG 20180330 WA0012 e1522408151998 - 2026

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.

திண்டுக்கல் – திருச்சி பாதையில் பராமரிப்பு பணி என்பதால் இன்று ரயில்கள் கரூர் வழியாகச் செல்லும் என்று நேற்றே அறிவிக்கப் பட்டிருந்ததாம். இந்நிலையில், மதுரைக்கு வந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் திண்டுக்கல்லிலேயே சுமார் 1 மணி நேரம் நிறுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் கரூர் பாதையில் உள்ள எரியோடு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்ட ரயில், 4.10 மணி அளவில்தான் எரியோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வசதி இன்றி அவதிப் பட்டனர்.

IMG 20180330 WA0016 e1522408215949 - 2026

மேலும், அடுத்த ரயில்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகினர். சென்னை செண்ட்ரலில் இருந்து ஹவுரா விரைவு வண்டியில் இன்று இரவு செல்ல முன் பதிவு செய்திருந்தவர்கள், இந்த மூன்று மணி நேர தாமதத்தால் என்ன செய்வது என்று பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாயினர். ரயில் தாமதத்தால் தங்களால் குறிப்பிட்ட விரைவு ரயிலில் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் அதற்கு மாற்று ஏற்பாடை ரயில்வே நிலைய அதிகாரிகளும் ரயில்வே துறையும் தான் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சென்னையில், ஏதாவது ஒரு புயல்...

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

Topics

தேவை மக்கள் மனநிலையில் மாற்றம்!

ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் சென்னையில், ஏதாவது ஒரு புயல்...

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

அமெரிக்காவில் 1.7 பில்லியன் ஆண்டுகள் பழமையான விஷ்ணு பாறைகள்

இந்த விஷ்ணு கோவில் அல்லது விஷ்ணுப் பாறைகளுக்கு அருகே மேலு இரண்டு பாறைத் தொடர்களுக்கு ப்ரும்மா பாறை, ராம் பாறை என்றும் பெயரிடப்பட்டிருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Entertainment News

Popular Categories