பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!

IMG 20180330 WA0012 e1522408151998 - 2026

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.

திண்டுக்கல் – திருச்சி பாதையில் பராமரிப்பு பணி என்பதால் இன்று ரயில்கள் கரூர் வழியாகச் செல்லும் என்று நேற்றே அறிவிக்கப் பட்டிருந்ததாம். இந்நிலையில், மதுரைக்கு வந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் திண்டுக்கல்லிலேயே சுமார் 1 மணி நேரம் நிறுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் கரூர் பாதையில் உள்ள எரியோடு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்ட ரயில், 4.10 மணி அளவில்தான் எரியோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வசதி இன்றி அவதிப் பட்டனர்.

IMG 20180330 WA0016 e1522408215949 - 2026

மேலும், அடுத்த ரயில்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகினர். சென்னை செண்ட்ரலில் இருந்து ஹவுரா விரைவு வண்டியில் இன்று இரவு செல்ல முன் பதிவு செய்திருந்தவர்கள், இந்த மூன்று மணி நேர தாமதத்தால் என்ன செய்வது என்று பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாயினர். ரயில் தாமதத்தால் தங்களால் குறிப்பிட்ட விரைவு ரயிலில் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் அதற்கு மாற்று ஏற்பாடை ரயில்வே நிலைய அதிகாரிகளும் ரயில்வே துறையும் தான் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories