பாதை பராமரிப்பால் குருவாயூர் ரயில் தாமதம்; அவதியுற்ற பயணிகள்!

Published:

IMG 20180330 WA0012 e1522408151998 - 2026

திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே மணப்பாறை பகுதியில் ரயில் பாதை பராமரிப்பால், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நடுவழியில் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்டது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியுற்றனர்.

திண்டுக்கல் – திருச்சி பாதையில் பராமரிப்பு பணி என்பதால் இன்று ரயில்கள் கரூர் வழியாகச் செல்லும் என்று நேற்றே அறிவிக்கப் பட்டிருந்ததாம். இந்நிலையில், மதுரைக்கு வந்து திருச்சி வழியாக சென்னை செல்ல வேண்டிய குருவாயூர் விரைவு ரயில் திண்டுக்கல்லிலேயே சுமார் 1 மணி நேரம் நிறுத்தப் பட்டுள்ளது. தொடர்ந்து, திண்டுக்கல் கரூர் பாதையில் உள்ள எரியோடு ரயில் நிலையத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப் பட்ட ரயில், 4.10 மணி அளவில்தான் எரியோடு ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுள்ளது. இதனால் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக பயணிகள் வசதி இன்றி அவதிப் பட்டனர்.

IMG 20180330 WA0016 e1522408215949 - 2026

மேலும், அடுத்த ரயில்களுக்கு தொடர்ந்து செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் மன அழுத்தத்துக்கு ஆளாகினர். சென்னை செண்ட்ரலில் இருந்து ஹவுரா விரைவு வண்டியில் இன்று இரவு செல்ல முன் பதிவு செய்திருந்தவர்கள், இந்த மூன்று மணி நேர தாமதத்தால் என்ன செய்வது என்று பெரும் மன அழுத்தத்துக்கு உள்ளாயினர். ரயில் தாமதத்தால் தங்களால் குறிப்பிட்ட விரைவு ரயிலில் பயணிக்க இயலாத சூழல் ஏற்பட்டு விடும் என்றும் அதற்கு மாற்று ஏற்பாடை ரயில்வே நிலைய அதிகாரிகளும் ரயில்வே துறையும் தான் செய்ய வேண்டும் என்றும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img