கூரியர் மூலம் எலி மருந்து; அதிமுக., எம்.பி.க்கு அனுப்பிய ‘பெரியார்’

Published:

cauvery issue mps anbumani - 2026

கோயமுத்தூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி எம்.பி-க்கு கூரியர் மூலம் எலி மருந்தை பார்சலில்  அனுப்பியுள்ளார் ஒருவர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு வாக்காளர் ஒருவர் கூரியர் மூலம் எலி மருந்து அனுப்பி வைத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தற்கொலைக்குக் கூடத் தயார் என அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி கிணத்துக்கடவைச் சேர்ந்த பெரியார் மணி என்பவர் தமது தொகுதிக்குட்பட்ட எம்.பி. மகேந்திரனின் தில்லி முகவரிக்கு எலி மருந்தை அனுப்பி வைத்துள்ளார்.

இந்த மருந்தை அவர் குடிப்பாரா என்று சமூக தளங்களில் அதற்குள் விவாதங்கள் களைகட்ட, ஒரு எம்.பி.யை தற்கொலைக்குத் தூண்டி, எலி மருந்தைக் கொடுத்துள்ள ’பெரியார்’ குறித்து பேச்சுகளும் களை கட்டியுள்ளன.

 

 

ALSO READ:  நடத்தையில் சந்தேகம்... நடந்த சண்டை... மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img