ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை 29 ஆக உள்ளது. வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது 34 ஆக இருந்தது வேட்பாளர்களின் எண்ணிக்கை. வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள கடைசி நாளான இன்று சுயேட்சைகள் 5 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர். இதை அடுத்து களத்தில் 29 பேர் உள்ளனர். இவர்களில் திமுக, அதிமுக, பாஜக, கம்யூனிஸ்ட் வேட்பாளர்களும் அடங்குவர்.

