ராஜா படத்தில் திமுக.,வினர் எச்ச துப்பி போராட்டம்: பதிலுக்கு பாஜக., என்ன செய்யப் போகிறது?

raja 1 horz - 2026

அருவறுப்பு அருப்புக்கோட்டையில் ஆரம்பித்து வைத்த அசிங்கமான போராட்டம் இப்போது எச்ச துப்பிப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்லும் விதமாக செல்போனில் பேசிய ஆடியோ ஊரெல்லாம் பரவினாலும் பரவியது, இப்போது தமிழக அரசியலே அசிங்கங்களின் உச்சமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி இவர்கள் தொடங்கி வைத்த அருவறுப்பு அரசியல் பேச்சின் தொடர்ச்சியாக அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ட அநாகரீகப் பேச்சாளர் வெற்றி கொண்டான் பாணியில் இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

முன்னர் ஏதோ ஓர் ஊரில் ஒரு சந்தைப் பகுதியில் அல்லது பேருந்து நிலையத்தில் இது போன்ற மேடைப் பேச்சுகள் பொதுவில் நடத்தப்படும். அவற்றை அனைவரும் கேட்டு அருவறுப்பு அடையக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இப்போது டிவிட்டரும், யுடியூபும் சமூக வலைத்தளங்களும், அவற்றை எடுத்துப் போட்டு செய்தியாக்கி, அனைத்து வீடுகளின் வரவேற்பறைக்கே கொண்டு வந்து அனைவரின் காதுகளிலும் கேட்கச் செய்யும் செய்தி ஊடகங்களின் தயவால், வீட்டுப் பெண்கள் தொடங்கி அனைவரும் அருவறுப்பு அடைகின்றனர்.

ஒரு பேராசிரியை மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த வார்த்தைகளை பெரும்பாலும் எல்லோரும் கேட்டாயிற்று. தொடர்ந்து 80 வயதை நெருங்கும் ஆளுநர் கிழவரை தாத்தா மாதிரிதான் ஆனால்.. என்று வம்புக்கு இழுத்து, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியும் விட்டாயிற்று. இப்போது, பெண்களை வைத்து அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கும் இழி நிலைக்கு தமிழக அரசியல் வந்திருக்கிறது.

ALSO READ:  நாட்டை உலுக்கிய நாசிக் ‘கார்ப்பரேட் ஜிகாத்’: டிசிஎஸ்.,ஸை தொடர்ந்து மேலும் புகார்கள்!

பாஜக.,வில் உள்ள பெண்களை வம்புக்கு இழுத்து, அருவறுக்கத் தக்க வாசகங்களால் இணையத்தில் சில கட்சிகளின் தொண்டர்கள் அவதூறு பரப்பியபோது, பாஜக.,வினர் வெகுண்டெழுந்தார்கள். வழக்கம் போல் கையைப் பிசைந்து கொண்டிருக்காமல், இந்த முறை அறிவு ஆலய தலைமைப் பீடத்தின் பீடாதிபதியையே வம்புக்கு இழுத்தார்கள். அதைச் செய்தவர் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா. அவர் அந்தத் தலைவரை குறி வைக்கப் போய், அந்தக் கருத்தோ பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் சென்றது. இதனால் கொதித்தெழுந்த திமுக.,வினர் ஹெச்.ராஜாவையும் அவரது குடும்பத்தையும் வம்பிக்கு இழுத்து நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

h raja bridge - 2026

தொடர்ந்து, மோசமான சொல்லாடல்களால் சமூக இணையதளம் நிரம்பி வழிந்தது. ஹெச்.ராஜாவை எச்.ராஜா என்றும் எச்ச ராஜா என்றும் கூறி வந்த திமுக., எடுபிடிகள், இப்போது அதே வார்த்தையை வைத்து, எச்ச துப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். திமுகவினர் ஹெச்.ராஜாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் ஒட்டி, அதன் மீது எச்சில் துப்பி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக இன்று காலை, ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை தொங்க விட்டு, தூக்கில் தொங்குவது போல் போராட்டம் நடத்தி அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

இப்போது இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி போராட்டங்களாக பாஜக., என்ன வித்தியாசமாக நடத்தப் போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories