ராஜா படத்தில் திமுக.,வினர் எச்ச துப்பி போராட்டம்: பதிலுக்கு பாஜக., என்ன செய்யப் போகிறது?

raja 1 horz - 2026

அருவறுப்பு அருப்புக்கோட்டையில் ஆரம்பித்து வைத்த அசிங்கமான போராட்டம் இப்போது எச்ச துப்பிப் போராடும் நிலைக்கு வந்திருக்கிறது.

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி, கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்து செல்லும் விதமாக செல்போனில் பேசிய ஆடியோ ஊரெல்லாம் பரவினாலும் பரவியது, இப்போது தமிழக அரசியலே அசிங்கங்களின் உச்சமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. சுமார் 60 ஆண்டுகால திராவிட இயக்கங்களின் ஆட்சியில் அண்ணா, கருணாநிதி இவர்கள் தொடங்கி வைத்த அருவறுப்பு அரசியல் பேச்சின் தொடர்ச்சியாக அவர்களை எல்லாம் தூக்கி சாப்பிட்ட அநாகரீகப் பேச்சாளர் வெற்றி கொண்டான் பாணியில் இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள்.

முன்னர் ஏதோ ஓர் ஊரில் ஒரு சந்தைப் பகுதியில் அல்லது பேருந்து நிலையத்தில் இது போன்ற மேடைப் பேச்சுகள் பொதுவில் நடத்தப்படும். அவற்றை அனைவரும் கேட்டு அருவறுப்பு அடையக்கூடிய வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இப்போது டிவிட்டரும், யுடியூபும் சமூக வலைத்தளங்களும், அவற்றை எடுத்துப் போட்டு செய்தியாக்கி, அனைத்து வீடுகளின் வரவேற்பறைக்கே கொண்டு வந்து அனைவரின் காதுகளிலும் கேட்கச் செய்யும் செய்தி ஊடகங்களின் தயவால், வீட்டுப் பெண்கள் தொடங்கி அனைவரும் அருவறுப்பு அடைகின்றனர்.

ஒரு பேராசிரியை மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த வார்த்தைகளை பெரும்பாலும் எல்லோரும் கேட்டாயிற்று. தொடர்ந்து 80 வயதை நெருங்கும் ஆளுநர் கிழவரை தாத்தா மாதிரிதான் ஆனால்.. என்று வம்புக்கு இழுத்து, பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியும் விட்டாயிற்று. இப்போது, பெண்களை வைத்து அரசியலை ஓட்டிக் கொண்டிருக்கும் இழி நிலைக்கு தமிழக அரசியல் வந்திருக்கிறது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பாஜக.,வில் உள்ள பெண்களை வம்புக்கு இழுத்து, அருவறுக்கத் தக்க வாசகங்களால் இணையத்தில் சில கட்சிகளின் தொண்டர்கள் அவதூறு பரப்பியபோது, பாஜக.,வினர் வெகுண்டெழுந்தார்கள். வழக்கம் போல் கையைப் பிசைந்து கொண்டிருக்காமல், இந்த முறை அறிவு ஆலய தலைமைப் பீடத்தின் பீடாதிபதியையே வம்புக்கு இழுத்தார்கள். அதைச் செய்தவர் பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா. அவர் அந்தத் தலைவரை குறி வைக்கப் போய், அந்தக் கருத்தோ பெண்ணை இழிவுபடுத்தும் விதத்தில் சென்றது. இதனால் கொதித்தெழுந்த திமுக.,வினர் ஹெச்.ராஜாவையும் அவரது குடும்பத்தையும் வம்பிக்கு இழுத்து நடுத்தெருவில் நிறுத்தினார்கள்.

h raja bridge - 2026

தொடர்ந்து, மோசமான சொல்லாடல்களால் சமூக இணையதளம் நிரம்பி வழிந்தது. ஹெச்.ராஜாவை எச்.ராஜா என்றும் எச்ச ராஜா என்றும் கூறி வந்த திமுக., எடுபிடிகள், இப்போது அதே வார்த்தையை வைத்து, எச்ச துப்பி போராட்டம் நடத்தியுள்ளனர். திமுகவினர் ஹெச்.ராஜாவின் புகைப்படத்தை குப்பைத் தொட்டியில் ஒட்டி, அதன் மீது எச்சில் துப்பி போராட்டம் நடத்தினர்.

முன்னதாக இன்று காலை, ஆர்.ஏ.புரம் மூப்பனார் பாலத்தில் ஹெச்.ராஜாவின் உருவபொம்மையை தொங்க விட்டு, தூக்கில் தொங்குவது போல் போராட்டம் நடத்தி அதையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இப்போது இந்தப் போராட்டங்களுக்கு பதிலடி போராட்டங்களாக பாஜக., என்ன வித்தியாசமாக நடத்தப் போகிறதோ என்ற கலக்கத்தில் உள்ளனர் அரசியல் நோக்கர்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories