February 19, 2026, 6:55 PM
28.4 C
Chennai

ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

Yogi Adityanath studying in hospital in Uttar Pradesh - 2026

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `இந்த விவகாரத்தில் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்’ என கொதித்திருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் ஷேக் என்பவரை என்கவுண்டர் செய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி லோயா, தமது நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அமித் ஷாவின் வழக்கை விசாரித்து வரும் நிலையில் நீதிபதி மரணம் அடைந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல்.

இந்நிலையில், லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நீதிபதி லோயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம், காங்கிரஸின் நிலை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, மக்களிடம் எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கும் விதமாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்றார் உணர்ச்சிகரமாக!

அண்மைய குஜராத் தேர்தலில், அமித் ஷா மீதான இந்த வழக்கையும் முன்வைத்து காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories