ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

Yogi Adityanath studying in hospital in Uttar Pradesh - 2026

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `இந்த விவகாரத்தில் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்’ என கொதித்திருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் ஷேக் என்பவரை என்கவுண்டர் செய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி லோயா, தமது நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அமித் ஷாவின் வழக்கை விசாரித்து வரும் நிலையில் நீதிபதி மரணம் அடைந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல்.

இந்நிலையில், லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நீதிபதி லோயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம், காங்கிரஸின் நிலை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, மக்களிடம் எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கும் விதமாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்றார் உணர்ச்சிகரமாக!

அண்மைய குஜராத் தேர்தலில், அமித் ஷா மீதான இந்த வழக்கையும் முன்வைத்து காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

Topics

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க, பக்தர்கள் தங்கள் ஆடைகளை ஆற்றில் வீசி எறிவதற்குத் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொகுதி, வேட்பாளர் தேர்வில் அதிருப்தி: காங்கிரஸில் என்ன நடக்கிறது?

காங்கிரசை எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க பாத்தீங்களா செல்வப்பெருந்தகை? என்று கட்சியினர் குமுறும் அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

Entertainment News

Popular Categories