ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்: கொதித்தெழுந்த யோகி

Yogi Adityanath studying in hospital in Uttar Pradesh - 2026

நீதிபதி லோயா மரணம் தொடர்பான வழக்கில் விசாரணை கோரி தாக்கல் செய்யப் பட்ட மனுவை இன்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. `இந்த விவகாரத்தில் ராகுல் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கேட்டே ஆக வேண்டும்’ என கொதித்திருக்கிறார் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்.

குஜராத் மாநில உள்துறை அமைச்சராக அமித் ஷா இருந்தபோது, சொராபுதீன் ஷேக் என்பவரை என்கவுண்டர் செய்த வழக்கில் சிக்கினார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதி லோயா, தமது நண்பர் ஒருவரின் இல்ல திருமணத்துக்குச் சென்றிருந்தபோது, மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

அமித் ஷாவின் வழக்கை விசாரித்து வரும் நிலையில் நீதிபதி மரணம் அடைந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று கூறி, காங்கிரஸ், சி.பி.எம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் இறங்கின. `நீதிபதி மரணத்தில் நீதி விசாரணை தேவை’ என உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த வழக்கு தொடர்பாக, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்தும் முறையிட்டார் ராகுல்.

இந்நிலையில், லோயா மரணம் குறித்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, லோயா மரணம் இயற்கையானதுதான் என உறுதியாகத் தெரியும் போது, தேவையற்ற அரசியல் விவகாரங்களுக்கு நீதிமன்றத்தை இழுக்காதீர்கள் என்று கூறி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், `நீதிபதி லோயா வழக்கில் அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பின் மூலம், காங்கிரஸின் நிலை மீண்டும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக, மக்களிடம் எதிர்மறை உணர்ச்சிகளை வளர்க்கும் விதமாகவே அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். இதற்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும்’ என்றார் உணர்ச்சிகரமாக!

அண்மைய குஜராத் தேர்தலில், அமித் ஷா மீதான இந்த வழக்கையும் முன்வைத்து காங்கிரஸ் தேர்தல் பிரசாரம் செய்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories