December 5, 2025, 7:21 PM
26.7 C
Chennai

வன்முறையில் இறங்கிய ஊடகவியலாளர்கள்! எஸ்.வி.சேகர் வீடு மீது கல்வீசித் தாக்குதல்

svesekar house attacl - 2025

சென்னை: பத்திரிகையாளர்கள் குறித்து தவறான வகையில் கருத்துகளை பகிர்ந்த எஸ்.வி.சேகரின் வீட்டை முற்றுகையிட்டு ஊடகத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மந்தைவெளியில் உள்ள எஸ்.வி.சேகரின் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்ட போது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்கலைக்கழகங்களை விட மீடியாக்களில் தான் பாலியல் மிரட்டல் சம்பவங்கள் பெண்களுக்கு அதிகம் நேர்கிறது என்று திருமலை.சா என்பவர் பதிவிட்ட பேஸ்புக் பதிவை எஸ்.வி.சேகர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், பெண் செய்தியாளர்கள் பலர் பாலியல் ரீதியாக துன்பப் பட்டே பொறுப்புகளைப் பெற முடிகிறது என்று கருத்துப் பதிவிட்டிருந்தார். இதனால் பெண் பத்திரிகையாளர்கள் கொதித்தெழுந்தனர். உடன், பத்திரிகையாளர்கள் சங்கங்களும் தங்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டன. இதனால், எஸ்.வி.சேகருக்கு எதிரான போராட்டங்களில் செய்தியாளர்கள் ஈடுபட்டனர்.

போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை மந்தைவெளி பகுதியில் அமைந்துள்ள எஸ்.வி. சேகர் வீட்டை பத்திரிக்கையாளர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் எஸ்.வி. சேகர் வெளியே வந்து மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டனர்.

எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு அதற்கு மன்னிப்பு என்று ஒரு அறிக்கை விடுவது பிரச்னைக்கான தீர்வு அல்ல. எஸ்.வி. சேகர் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர்கள் வலியுறுத்தினர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்துக்கு அழைத்துச் சென்று, உள்ளே வைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் பின்னர் மாலை நேரம் விடுவிக்கப் பட்டனர்.

பேனாவும், கேமராவும் மைக்கும் பிடிக்க வேண்டிய கைகளில் கற்களை எடுத்து, சரமாரியாக வீசி எறிந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஊடகவியலாளர்கள் குறித்து சமூக மட்டத்தில் அதிர்ச்சி நிலவுகிறது. ஜனநாயகக் கருத்து என்ற வகையில் எதையும் கருத்து ரீதியாக எதிர்கொள்ளும் வலிமை வாய்ந்த துறையைச் சேர்ந்தவர்கள், ரவுடிகளைப் போல் கோஷமிட்டுக் கொண்டு கற்களை கைகளில் எடுத்து தாக்குதல் நடத்தியது, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ஒருவேளை கட்சிகளைச் சேர்ந்த ரவுடிகளைத்தான் ஊடகங்களில் பணியில் சேர்த்திருக்கிறார்களோ என்று சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பதிவு செய்தனர்.

டிவி ஸ்டூடியோவுக்கு உள்ளே சொல்வீச்சில் ஈடுபட்டு, மற்றவரைப் பேச விடாமல் கருத்துகளை அமுக்கிவிட்டு ஜனநாயக ரீதியில் செயல்படுவதாகக் கூறிக் கொள்பவர்கள், இப்போது கற்களை வீசித் தாக்கி இதையும் ஜனநாயகப் போராட்டம் என்று சொல்லி விடுவார்களோ என பலரும் தங்கள் அச்சத்தை தெரிவித்துள்ளனர்.

கல்வீச்சில் ஈடுபட்ட பத்திரிகையாளர்கள் குறித்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories