December 5, 2025, 6:17 PM
26.7 C
Chennai

மோடி குறித்து அவதூறுப் பேச்சு: வைகோ வாகனம் மீது கல்வீச்சு!: 25 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்கொண்டாராம்!

vaiko in udankudi bjp opposses - 2025

தூத்துக்குடி: உடன்குடியில் ஸ்டெர்லைட் குறித்து பிரசாரம் செய்தபோது, மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் வைகோவுக்கு கருப்பு கொடி காட்ட வந்த பா.ஜ.க.வினர், மேலும் ஆத்திரம் அடைந்து வைகோ வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை நெல்லை, செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணி அளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார்.

ஏற்கெனவே மோடி குறித்து கடுமையாக அவதூறு பரப்பி, மரியாதை இன்றிப் பேசிய வைகோவுக்கு கருப்பு கொடி காட்டும் விதமாக, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். இந்நிலையில் வைகோவிடம் சென்ற போலீஸார், அவரிடம் பாஜக.,வினர் கருப்புக் கொடி ஏந்தி நிற்கும் செய்தியைச் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, தாம் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என்று கூறினார்.

இதை அடுத்து, திட்டமிட்ட பாதையிலேயே வந்த வைகோ, அங்கு பாரதிய ஜனதாவினரை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடியைப் போல கருப்புக் கொடியை கண்டு பயந்து ஓட மாட்டேன் என பேசினார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதாவினர், பின் வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர்.

இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ வேனில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர், இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன். அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்று பேசினார். பின்னர் அவர் உடன்குடி பஜாரில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

தடியடி சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories