மோடி குறித்து அவதூறுப் பேச்சு: வைகோ வாகனம் மீது கல்வீச்சு!: 25 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்கொண்டாராம்!

vaiko in udankudi bjp opposses - 2026

தூத்துக்குடி: உடன்குடியில் ஸ்டெர்லைட் குறித்து பிரசாரம் செய்தபோது, மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் வைகோவுக்கு கருப்பு கொடி காட்ட வந்த பா.ஜ.க.வினர், மேலும் ஆத்திரம் அடைந்து வைகோ வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை நெல்லை, செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணி அளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார்.

ஏற்கெனவே மோடி குறித்து கடுமையாக அவதூறு பரப்பி, மரியாதை இன்றிப் பேசிய வைகோவுக்கு கருப்பு கொடி காட்டும் விதமாக, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். இந்நிலையில் வைகோவிடம் சென்ற போலீஸார், அவரிடம் பாஜக.,வினர் கருப்புக் கொடி ஏந்தி நிற்கும் செய்தியைச் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, தாம் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என்று கூறினார்.

இதை அடுத்து, திட்டமிட்ட பாதையிலேயே வந்த வைகோ, அங்கு பாரதிய ஜனதாவினரை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடியைப் போல கருப்புக் கொடியை கண்டு பயந்து ஓட மாட்டேன் என பேசினார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதாவினர், பின் வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர்.

ALSO READ:  அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ வேனில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர், இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன். அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்று பேசினார். பின்னர் அவர் உடன்குடி பஜாரில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தடியடி சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories