மோடி குறித்து அவதூறுப் பேச்சு: வைகோ வாகனம் மீது கல்வீச்சு!: 25 ஆண்டுகளில் முதல்முறையாக எதிர்கொண்டாராம்!

vaiko in udankudi bjp opposses - 2026

தூத்துக்குடி: உடன்குடியில் ஸ்டெர்லைட் குறித்து பிரசாரம் செய்தபோது, மோடி குறித்து அவதூறாகப் பேசியதால் வைகோவுக்கு கருப்பு கொடி காட்ட வந்த பா.ஜ.க.வினர், மேலும் ஆத்திரம் அடைந்து வைகோ வாகனத்தின் மீது கல்வீசி தாக்கினர். தொடர்ந்து போலீஸ் தடியடி நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை நெல்லை, செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணி அளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார்.

ஏற்கெனவே மோடி குறித்து கடுமையாக அவதூறு பரப்பி, மரியாதை இன்றிப் பேசிய வைகோவுக்கு கருப்பு கொடி காட்டும் விதமாக, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். இந்நிலையில் வைகோவிடம் சென்ற போலீஸார், அவரிடம் பாஜக.,வினர் கருப்புக் கொடி ஏந்தி நிற்கும் செய்தியைச் சொல்லி, மாற்றுப் பாதையில் செல்லும் படி கூறினார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வைகோ, தாம் திட்டமிட்ட பாதையில் தான் செல்வோம் என்று கூறினார்.

இதை அடுத்து, திட்டமிட்ட பாதையிலேயே வந்த வைகோ, அங்கு பாரதிய ஜனதாவினரை கண்டதும் பிரதமர் நரேந்திர மோடியைப் போல கருப்புக் கொடியை கண்டு பயந்து ஓட மாட்டேன் என பேசினார். இதனால் ஆவேசமடைந்த பாரதிய ஜனதாவினர், பின் வைகோவின் பிரசார வாகனம் முன் நின்றபடி, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர்.

ALSO READ:  நாடு திரும்புங்க; அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஸோஹோ ஸ்ரீதர் வேம்புவின் மடல்!

இதை அடுத்து இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து வைகோ பிரசார வேன் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. இதனால் வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினர். பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ வேனில் நின்றவாறு பேசினார்.

அப்போது அவர், இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன். அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது” என்று பேசினார். பின்னர் அவர் உடன்குடி பஜாரில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

ALSO READ:  மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

தடியடி சம்பவத்தில் காயம் அடைந்த பாரதிய ஜனதாவினர் 6 பேர் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories