சசிகலாவிடம் ‘ஜெ’ சிடிக்கள் நிறைய இருக்கும்: அதில் ஒன்றைத் திருடி வெளியிட்டு தினகரன் ஆர்கே.நகரில் வென்றார்: திவாகரன்

Published:

divagaran - 2026

தினகரனால் கைவிடப் பட்ட அதிமுக., அம்மா அணிக்கு உயிர் கொடுத்து, மீண்டும் இரட்டை இலை மீட்பு, அம்மா அணி என்றெல்லாம் கூறிக்கொண்டு அரசியல் செய்யக் கிளம்பியிருக்கும் திவாகரன், நேற்று சென்னை ராயபுரத்தில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை துவங்கினார்.

அம்மா அணியின் முதல் சுற்றுப் பயணம் என்ற பிரசாரத்துடன், தனது சுற்றுப் பயணத்தை தொடங்கிய திவாகரன், தற்போது மாறிவிட்ட சூழலில் தினகரனை ஒரு பிடி பிடித்தார். ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது எப்படி தெரியுமா என்ற ரகசியத்தைச் சொல்வது போல் ஒரு தகவலைச் சொன்னார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முந்தைய நாள், அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்ற வீடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால் அந்த வீடியோ குறித்து பலருக்கும் சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், சசிகலா மறைத்து வைத்திருந்த ஜெயலலிதாவின் மருத்துவமனை சி.டியை திருடி வெளியிட்டு டிடிவி.தினகரன் வெற்றி பெற்றார் என்று திவாகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஜெயலலிதாவின் மேலும் பல சிடிக்கள், சசிகலாவிடம் இருக்கலாம் என்று ஒரு தகவலையும் கூறினார். அப்படி எனில், இந்த சிடி ரகசியம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணைக் குழுவில் தெரிவிக்கப்பட்டதா என்ற செய்தியாளரின் கேள்விக்கு உடனடி பதிலில்லை!

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img