13 வயது சிறுவனை தந்தையாக்கிய பெண்! அதிர்ந்து போன கணவர்!

Published:

britten - 2026

பிரிட்டன் நாட்டில் பெர்ஷையர் வின்ட்சர் நகரத்தை சேர்ந்தவர் 20 வயது பெண் லியா கார்டைஸ்!

குழந்தை பராமரிப்பு பற்றின படிப்பை தன் முதுகலை பட்டத்தில் படித்து வருகிறார். இதை தவிர நர்சரி பள்ளியில் டீச்சராவும் வேலை பார்த்து வருகிறார்.

2017-ம் ஆண்டில் ஒருநாள், செம போதையில் லியா இருந்துள்ளார். அப்போது திடீரென 13 வயது சிறுவனின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துவிட்டார். போதை தலைக்கேறியதில் அந்த சிறுவனை பலாத்காரமும் செய்துள்ளார்.

இதற்கு பிறகும் அடிக்கடி அந்த சிறுவன் வீட்டிற்குள் நுழைந்து பலமுறை அவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதில் இவருக்கு ஒரு காதலன் இருக்கிறார். பல வருடமாக காதலித்து வரும் இவர். சிறுவனுடன் உறவு இருந்தபோதும் காதலனை கைவிடவில்லை. இறுதியில் காதலனை கல்யாணமும் செய்துகொண்டார் லியா!

போன வருடம் இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை ஆசையாக இருவருமே வளர்த்து வந்தனர்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

லியா திரும்பவும் அந்த சிறுவனையே நாடினார். 2018ம் ஆண்டு ஜுலை மாதம் சிறுவனை தேடி சென்றார்.. வலுக்கட்டாயமாக வழக்கம்போல் உறவும் வைத்து கொண்டார். ஆனால் இதை கணவர் கண்டுவிட்டார்.

ஆத்திரமும், ஆவேசமும் அடைந்தார்.. ஒருவேளை பிறந்த குழந்தை, தன்னுடையது இல்லையோ என சந்தேகமும் வந்துவிட்டது. அதனால் உடனடியாக மனைவி மீது பக்கத்தில் இருந்த ஒரு ஸ்டேஷனில் புகார் தந்தார். அதன்பேரில் போலீசாரும் விசாரணையில் இறங்கினார்.

ஆனால் லியா, தான் எந்த தப்புமே செய்யவில்லை. அந்த சிறுவன் யாரென்று தெரியாது என அடித்து பேசினார்.

கணவர் சொன்ன குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்தார். லியா பேச்சை பார்த்து குழம்பிய போலீசார், பேசாமல் குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை செய்துவிடலாம் என முடிவு செய்தனர்

அதன்படியே சோதனையும் நடத்தப்பட்டது. இறுதியில், அந்த குழந்தைக்கு அப்பா 13 வயது சிறுவன் தான் என ரிப்போர்ட் வந்தது!

ஒரு சந்தேகத்துக்காக டெஸ்ட் எடுக்க சொன்னால், உண்மையாகவே அந்த சிறுவன்தான் அப்பாவா என அதிர்ச்சி அடைந்தார் கணவர்! அளவுக்கு மீறி பாசத்தையும், அன்பையும் பொழிந்து குழந்தையை தூக்கி கொஞ்சி கொண்டிருந்தவர் தலையில் இடி வந்து விழுந்ததுபோல ஆகிவிட்டது. இன்னும் அவர் இந்த அதிர்ச்சியில் இருந்து மீளவே இல்லை என்றாலும் இந்த சம்பவத்தின் பரபரப்பும் அங்கு அடங்கவே இல்லை.

ALSO READ:  செங்கோட்டையில் கிருஷ்ண ஜயந்தி விழா கோலாகலம்; கோவில்களில் குவிந்த பக்தர்கள்!

Related articles

Recent articles

spot_img