HBDMKStalin | எங்களுக்கு கண்டண்ட் தரும் கண்டெய்னரே! இதோ உங்களுக்கான கண்டெண்ட்!

stalinhbd4 - 2026

எங்களுக்கு கண்டண்ட் தரும் கண்டெய்னரே…
தமிழகத்தின் நிரந்தர எதிர்க்கட்சித் தலைவரே!
மார்ச் 1இல் பிறந்த ஏப்ரல் 1னே…
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்!

இன்று சமூகத் தளங்களில் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து அல்லோலகல்லோலப் படுகிறது. மு.க.ஸ்டாலினை வாழ்த்தி பிறந்த நாள் வாழ்த்துகளை #HBDMKStalin என்ற ஹேஷ்டேக்கில் கட்சியினர் ஒருபுறம் பகிர்ந்து கொண்டிருக்க… மறுபுறத்தில், இலவுகாத்த கிளி என்றும் #Hbd_இலவுகாத்தகிளி ஹேஷ் டேக் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மார்ச் 1 – திமுக.,தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள். வழக்கமாக உத்ஸாகத்துடன் கொண்டாடுவார்கள் கழகத் தொண்டர்கள். இந்த வருடம் கழக பொதுச் செயலர் க.அன்பழகனுக்கு உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருப்பதால், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை மட்டுப் படுத்திக் கொள்வதாகவும், தொண்டர்கள் யாரும் வீட்டுக்கு வந்து மாலை போட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

stalinhbd - 2026

இருந்த போதிலும், இன்று திமுக., தொண்டர்கள் சமூகத் தளங்களில் வாழ்த்து சொல்வதிலும், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்வதிலும் பிஸியாகிப் போயிருக்கிறார்கள். சிலர் வானளாவப் புகழ்ந்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.

அதே நேரம், தலைவரின் பிறந்த நாளில் இதை கட்டாயம் அவருக்குப் புரிய வைக்க வேண்டும் என்று தங்கள் உள்ளக்குமுறல்களையும்  வெளிப்படுத்துகிறார்கள் திமுக.,வின் மூத்த தலைவர்கள் சிலர்.

stalinhbd1 - 2026

தனது தந்தையின்  தயவில் கட்சிக்கு வந்தவர் ஸ்டாலின். மற்றவர்களுக்கு  அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை, அதனாலேயே தொண்டர்களால் வளர்ந்த கட்சியில் மற்றவர்களுக்கு தலைமைக்கான செல்வாக்கு இல்லை. கட்சிக்காக உழைத்தவர்கள்  இன்று அடையாளம் தெரியாமல் இருக்கிறார்கள்.

ALSO READ:  திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

stalinhbd2 - 2026ஸ்டாலின் கட்சிக்குள் வந்ததே, ராஜாவீட்டுக் கன்னுக்குட்டி என்ற கதையாக, பிறக்கும் போதே சில்வர் ஸ்பூன் ரேஞ்சில் பிறந்து வந்தவர். வளர்ந்த தலைவர் என்பதை விட, கருணாநிதியால், வளர்க்கப்பட்ட தலைவர்! தொண்டர்களிடம் செல்வாக்குடன் கிளைத்தெழுந்த தலைவர் இல்லை, தொண்டர்களிடம் திணிக்கப்பட்ட தலைவர்.

தற்போதும் ஸ்டாலின் தனக்கென்று தனி பரிவாரம் வைத்துக் கொண்டிருக்கிறார். அந்த பரிவாரமோ, ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிடுவார் என்றுதான் சுத்திக் இருக்கிறது. அதிமுக.,வை வளர்த்தெடுத்த ஜெயலலிதா போல் தனித்துவ சர்வாதிகாரியாக இருக்கலாம் என்று ஸ்டாலின் நினைக்கலாம். அதனால்தான் அவர் தன்னை சர்வாதிகாரி என்று கூறிக் கொண்டார். ஆனால், திமுக.,வோ தொண்டர்களால் வளர்ந்த கட்சி. தொண்டர்களையும் இரண்டாம் மட்டத் தலைவர்களையும் ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி நடத்த முடியாது.

கேகேஎஸ்எஸ்ஆர்.ராமசந்திரன், எ.வ.வேலு, செல்வகணபதி, சேகர்பாபு என்றெல்லாம் அதிமுக.,வில் இருந்து வந்த நபர்களையே நம்பிக் கொண்டிருக்கிறார். கரூர் செந்தில்பாலாஜி மீது அவரே வழக்கு போட்டுவிட்டு, இப்போது கட்சியில் இணைந்ததால் தூக்கி வைத்துக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். ஆனால், கட்சிக்காக உழைத்தவர்களைத் தள்ளி வைத்தாலும், வேண்டுமென்றே ஒதுக்கிவைத்தாலும் அவர்கள் கட்சித் தலைமையை மதிக்கிறார்கள்.

stalinhbd3 - 2026

திருச்சி சிவாவுக்குக் கூட அவரது தகுதிக்குரிய அளவுக்கு எதுவும் கிடைக்கவில்லை. நாஞ்சில் சம்பத் எனவெல்லாம் பேசினார். இன்று அவரை தூக்கிவைத்துக் கொண்டாடுகிறீர்கள். தஞ்சாவூரில் பழனி மாணிக்கம் கட்சிக்காக கடுமையாக உழைத்தவர். அவருக்கு உரிய அங்கீகாரம் இல்லை.

துரை முருகனுக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தம் என்கிறார்கள். ஆனாலும் ஏதோ அனுசரித்துப் போகிறீர்கள். அன்பில் பொய்யாமொழிக்கு அள்ளிக் கொடுத்தீர்கள்.!பழனிவேல்ராஜன், ஆர்எஸ்.பாரதி, அன்பில் பொய்யாமொழி, உங்க மருமகன் இவர்கள் தானே இன்று கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றனர்! திமுக.,வுக்கு பொதுக்குழுவே வேண்டாம்; நீங்களே முடிவு எடுக்கலாம்! படுத்துக் கொண்டிருக்கும் பேராசிரியருக்குக் கூட எதுவும் தெரியாது, நீங்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் அவர் பெயரில் அறிக்கை விட்டு, அசிங்கப் படுத்திக் கொண்டீர்கள்.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

திமுக.,வின் செல்வாக்கு, கட்சிக்கென ஒரு கட்டமைப்பு உள்ளது; திமுக.,வின் பலமே தொண்டர் பலம்தான். அதனை அவமதிப்பு செய்வது போல் உங்கள் நடவடிக்கை இருப்பதால் தான், இன்று இலவு காத்த கிளி என்ற கேலிக்கு நீங்கள் ஆளாகியிருக்கிறீர்கள்.

முன்பெல்லாம் கருணாநிதி இருந்த போது, தன்னுடன் யார் காரில் வரவேண்டும், அவர்களுடன் என்ன பேசிக் கொண்டே செல்ல வேண்டும் என்றெல்லாம் தீர்மானித்து அதன்படி, கட்சியை நடத்தினார். மதுரைமுத்து, முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன், வைகோ போன்றவர்களை காரில் ஏற்றிக் கொண்டு வருவார். அவர்களுடன் அப்போதே கட்சி விவாதம் நடக்கும். ஆனால் நீங்களோ, கட்சித் தாவல்களில் கரை கண்ட சேகர்பாபு, செல்வகணபதி, கேகேஎஸ்எஸ்ஆர் என்று சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இவர்கள் மீதெல்லாம் நீங்கள் தான் ஊழல் வழக்குகளைப் போட்டீர்கள். இன்று அவர்களுடனேயே சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள்!

இன்னும் சொல்லப் போனால், சுடுகாட்டுக் கூரை ஊழல் வழக்கை செல்வகணபதி மீது போட்டவரும் நீங்கள்தான். அதில் ஊழல் நிரூபிக்கப் பட்டு நீதிமன்றத்தால் தண்டனை பெற்றவர் பின்னர் மனம் திரும்பி உங்கள் காலடியில் விழுந்தார். அவரை மாநிலங்களவைக்கு கொண்டுவந்தீர்கள்.

ஈரோடு முத்துசாமிக்கு உரிய மரியாதை ஏன் கொடுக்கவில்லை? கேகேஎஸ்எஸ்ஆர் தடுத்தார் அதனால்! பரம்பரை திமுக.,க்காரனை ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி மாறி வந்தவர்களுக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தால், கட்சி கரைந்து கொண்டிருக்கிறது. பொங்கலூர் பழனிசாமியை ஒதுக்கிவிட்டீர்கள்! சுகவனத்தை ஒதுக்கிவிட்டீர்கள்!

நாமக்கல் மாவட்டச் செயலராக ஒருவரைப் போட்டிருக்கிறீர்கள். காந்திசெல்வன் மத்திய அமைச்சராக இருந்து எல்லா சேவகமும் செய்துவிட்டார். இன்று அவர் எங்கே இருக்கிறார் தெரியவில்லை. டி.ஆர்.பாலு இப்போது வேண்டப் படாதவர் ஆகிவிட்டார். அவர் இடத்தில் நேருவைக் கொண்டு வந்தீர்கள்.

மதுரை நம் எல்லை, நெல்லை நமக்குத் தொல்லை என்று கூறிக் கொண்டிருந்த கருணாநிதி ஏன் அப்படிச் சொன்னார்? நெல்லை மாவட்டத்தில் இருந்து கருப்பசாமி பாண்டியன் வந்தார். மதிக்கவில்லை. ஓடியே போய்விட்டார்! அதே நெல்லை மாவட்டத்துக்காரர் கேஎஸ் ராதாகிருஷ்ணனுக்கு என்ன செய்தீர்கள்?! கனிமொழி- அதிபன்போஸ் பிரச்னை தொடங்கி, ஈழப் பிரச்னை, ஐ.நா.,வுக்கு எடுத்துச் செல்வது, அங்கே பேசுவது என எல்லாவற்றிலும் முன்னணியில் நின்றார். ஆனால் அவரையோ நீங்கள் மனிதனாகக் கூட  நினைப்பதில்லை!

ALSO READ:  மலர்வளையம் வைப்பவர்கள்... சுடுகாட்டுக்கே வழி சொல்வார்கள்!

இலவு காத்த கிளி என்று உங்களை எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.  நீங்கள் இலவு காத்த கிளி! அவர்கள் பொறுமை காத்த பசுக்கள்! – என்று பொருமித் தீர்க்கிறார்கள் திமுக., இரண்டாம் மட்டத் தலைவர்கள். பிறந்த நாள் வாழ்த்துகள் உங்கள் காதுகளை நிறையச் செய்து வாழ்த்தொலி மயக்கத்தில் திளைத்திருக்கும் போது, இதையும் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

Entertainment News

Popular Categories