புகார் கொடுக்க வந்த பெண்ணை மடக்கி தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு வீடியோ: 5 பேர் மீது வழக்கு பதிவு

ps pcm natarajan1 - 2026

நெல்லை: புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் செல்போன் எண் பெற்று, அவரை மிரட்டி தன் வீட்டுக்கு வரச் செய்து, தனிமையில் இருந்த போலீஸ் ஏட்டு குறித்து வீடியோ எடுத்து முகநூல் உள்ளிட்ட சமூகத் தளங்களில் பதிவிட்ட 5 பேர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன். 40 வயதான இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இவர், பாவூர்சத்திரம் காவல் நிலையத்தில் ஏட்டாகப் பணி புரிகிறார். இவர், பாவூர்சத்திரம் அருகே ராஜேஸ்வரி நகரில் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளார்.

இவர், காவல் நிலையத்துக்கு புகார் அளிக்க வரும் பெண்களை ஆள் பார்த்து அவர்களிடம் செல்போன் எண் பெற்றுக் கொள்வாராம். அவர்களை பின்னர் தொடர்பு கொண்டு, வழக்கு விஷயமாகப் பேசுவதாகக் கூறி, கொஞ்சம் கடலை போட்டு, வழிக்குக் கொண்டு வருவாராம். பின்னர், தனது வீட்டுக்கு வரச் சொல்லி தனிமையில் இருப்பார் என்கிறார்கள்.

இவ்வாறு 50க்கும் மேற்பட்ட பெண்கள் அவரது வீட்டுக்கு வந்து செல்வதைக் கண்டு கொதிப்படைந்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், இவரைக் கையும் களவுமாகப் பிடிக்க திட்டமிட்டுள்ளனர். அதன்படி, ஒரு வழக்கில் புகார் அளிக்க வந்த கடையம், புலவனுாரைச் சேர்ந்த பாரதி (வயது 32) என்ற பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து தனிமையில் இருந்த போது, அவரது வீட்டு காலிங் பெல் அழுத்தி, நடராஜன் கதவைத் திறந்ததும் உள்ளே சென்று அவர்கள் இருந்த கோலத்தை செல்போனில் படம் பிடித்துள்ளனர் சிலர்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

நடராஜனையும் அந்தப் பெண்ணையும் ஆபாசமாகத் திட்டிய அவர்கள், அரைகுறை ஆடையுடன் அவர்கள் இருவரும் தங்களை விட்டுவிடுமாறு கெஞ்சியும் விடாமல் வீடியோ பதிவு செய்து, அந்தக் காட்சிகளை பேஸ்புக், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளங்களில் பரவ விட்டனர்.

இதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற ஆய்வாளர் தனலட்சுமி, இருவரையும் மீட்டுச் சென்றார். விசாரணைக்குப் பின்னர் ஏட்டு நடராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இதன் பின்னர் புலவனுார் பாரதி அளித்த புகாரின் பேரில், இருவரும் தனிமையில் இருந்த போது, அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து தகராறு செய்து படம் பிடித்த, அன்பழகன், அருண், பரமசிவன், ஆறுமுகபாண்டி, செந்தில்குமார் ஆகியோர் மீது, பிரிவுகள் 294 பி அவமானமாக திட்டுதல், 342 பெண்ணை அறையில் அடைத்து வைத்தல், 447 வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், 354 பெண்ணை மானபங்க படுத்துதல், 506 (2) மிரட்டுதல், (ஆபாச வீடியோவை முகநூலில் பரப்பியதற்காக) தகவல் தொழில்நுட்பப் பிரிவு 67 உள்ளிட்ட 7 பிரிவுகளில் 5 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ALSO READ:  தமிழகத்தின் 13வது முதல் அமைச்சராகப் பதவியேற்றார் ஜோசப் விஜய்!  

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories