பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாகி

Published:

Screenshot 20180507 183357 - 2026

பேனரை அகற்ற கூறிய டிராபிக் ராமசாமி மீது செருப்பு வீசிய அதிமுக பெண் நிர்வாக

மெரினாவில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட அதிமுக பேனரை அகற்ற கூறி போராடிய சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மீது அதிமுக பெண் நிர்வாகி ஒருவர் செருப்பு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்.

சென்னை மெரினா கடற்கரையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள் பங்கேற்றனர்.

ஜெயலலிதாவின் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவுக்காக அந்த பகுதியில் ஜெயலலிதாவின் பேனர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நலையில், சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மெரினாவுக்கு வந்திருந்தார். அப்போது, உயர்நீதிமன்றத்தின் உத்தரவு மற்றும் விதிமுறைகளுக்கு எதிராக அமைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்றுமாறு போலீசாரிடம் தெரிவித்தார்.

நீண்ட நேரமாகியும் அகற்றப் படாததால், பேனரை அகற்ற கூறி போராட்டத்தில் ஈடுபட்டார்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

அப்போது அங்கு வந்த அதிமுக பெண் நிர்வாகி ஒருவர், டிராபிக் ராமசாமியின் மீது செருப்பு மற்றும் துடைப்பத்தை வீசி தாக்குதல் நடத்தினார்.

இதனால், இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த வந்த போலீசார், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Related articles

Recent articles

spot_img