ஆளுநர் மேற்கொள்ளும் ஆய்வுக்கு புது விளக்கம் அளித்த ஹெச்.ராஜா..!

Published:

h.raja - 2026

மதுரை: ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் மாவட்ட வாரியாகச் சென்று நடத்துவது ஆய்வு அல்ல; அரசு திட்ட செயல்பாடுகள் குறித்த அறிதல், புரிதலே. அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம் திமுக., செயல் தலைவர் ஸ்டாலின் தனது தரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார் என்று, பாஜக., தேசியச் செயலர் ஹெச்.ராஜா கூறினார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச். ராஜா, மோடி தலைமையிலான பாஜக., அரசு தீர்க்கவே முடியாமல் கிடந்த பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டு வருகிறது. அதற்கு உதாரணங்களாக, ஓய்வு பெற்ற ராணுவத்தினருக்கான ஒரே பதவி; ஒரே ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தியது; காவிரி பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தது. காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைத்தது இவற்றைச் சொல்லலாம்.

கர்நாடக அரசு, அதன் பிரதிநிதிகளை நியமிக்க காலம் தாழ்த்திய நிலையில், மத்திய அரசு அதற்கான உறுப்பினர்களை நியமித்தது. அரசியலுக்காக திமுக., செயல் தலைவர் ஸ்டாலின், சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மாநிலத்துக்குத் தேவையான திட்டங்களைக் கேட்டுப் பெற, மாவட்டங்களில் திட்ட செயல்பாடுகள் குறித்து ஆளுநர் கேட்டறிகிறார். அவர் நடத்துவது ஆய்வு அல்ல. அறிதல், புரிதல்! அதற்கு அவருக்கு அதிகாரம் உள்ளது. அதை விமர்சிப்பதன் மூலம் ஸ்டாலின் தனது தரத்தை வெகுவாகக் குறைத்துக் கொள்கிறார். ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவர் போல நடந்து கொள்ளவில்லை… என்று கூறினார் ஹெச்.ராஜா.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img