கோவில்பட்டியில் திருமணம் மண்டபத்தில் ஜவுளி விற்பனைக்கு எதிர்ப்பு: தொழில் வர்த்தக சங்கத்தினர் புகார்

IMG 20180704 233107 - 2026

கோவில்பட்டியில் தனியார் திருமணம் மண்டபத்தில் பிரபல ஜவுளி நிறுவனம் மற்றும் நகைக்கடை சார்பில் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்துவதற்கு தொழில் வர்த்தக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவில்பட்டி எட்டயபுரம் சாலையிலுள்ள திருமண மண்டபத்தில் பிரபல நிறுவனம் சார்பில் நாளை முதல் இம்மாதம் 9ஆம் தேதி வரை ஜவுளி, நகைக் கண்காட்சி மற்றும் விற்பனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும், விதிமுறைகளுக்கு புறம்பாக அனுமதி அளித்த திருமண மண்டப உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் அனுமதியளித்த திருமண மண்டப உரிமையாளர்கள் மீதும், சட்டவிரோதமாக செயல்படவுள்ள ஜவுளி மற்றும் நகைக்கடை நிறுவனத்தினர் மீதும் தகுந்த நடவடிக்கை எடுப்பதோடு மட்டுமின்றி சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஏ.பி.கே.பழனிசெல்வம் தலைமையில் தொழில் வர்த்தக சங்க உறுப்பினர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் இதுகுறித்து வட்டாட்சியர், வணிகவரி அலுவலர், நகராட்சி ஆணையர் ஆகியோரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் மற்றும் ஜவுளி கடை வியாபாரிகள் ஆகியோர் கலைந்து சென்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories