நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

Kanchi varadarajaperumal temple uthsav - 2026

சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில் மணியக்காரரின் செயல்பாடு இருந்ததாக புகார் எழுந்தது.

நம்மாழ்வார் சாத்துமுறை விவகாரம் தமிழ் – சம்ஸ்கிருந்த வேதங்களைச் சொல்வதற்கு இடையிலான பிரச்னையாக ஒரு புறம் கிளம்ப, இன்னொரு புறம் சாதி ரீதியான பிரச்னையாக சிலர் தூண்டிவிட்டனர். இந்நிலையில் பிரம்மோத்ஸவம் முடியும் காலம் வரை, காஞ்சியில் பரபரப்பு நிலவியதால் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர்.

இந்நிலையில், ஒரு தரப்பினர் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயரதிகாரிகளுக்கு நடந்த விவகாரத்தை புகாராக அனுப்பினர். இந்நிலையில், சம்பவத்தன்று பிரச்னை ஏற்படாமல் தடுக்காத வகையிலும், பின்னணியில் இருந்து ஒரு தரப்புக்கு சாதகமாக இருப்பது போல் காட்டி, கோயில் நடைமுறையில் குழப்பத்தை விளைவித்ததாகவும் கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, நம்மாழ்வார் சாற்றுமுறை பாதியில் நிறுத்தப் பட்டது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த நாளிலும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்ய வாய்ப்பு இருந்த போதும், மெத்தனமாக செயல்பட்டு செயல் அலுவலர் பிரச்னையை மேலும் பெரிதாக்கியதால் பக்தர்கள் பலர் கொதித்துப் போயினர்

இதனிடையே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர், இணை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர், தாசில்தார் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காஞ்சி கோயில் செயல் அலுவலர் விஜயன் விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக குமரக் கோட்டம் செயல் அலுவலர் தியாகராஜன், காஞ்சி கோயிலின் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

இது குறித்து இணை ஆணையர் அசோக் குமார் கூறியபோது, வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த பிரச்னை தொடர்பாக விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories