December 5, 2025, 3:36 PM
27.9 C
Chennai

நம்மாழ்வார் சாற்றுமுறை ‘மோதல்’ விவகாரம்: காஞ்சி வரதர் கோயில் செயல் அலுவலர் பணியிடை நீக்கம்

Kanchi varadarajaperumal temple uthsav - 2025

சென்னை: காஞ்சிபுரத்தில் கடந்த மாதம் பிரம்மோத்ஸவம் நடைபெற்ற போது, நம்மாழ்வார் சாத்துமுறை நாளில் இரு கலை பிரிவினருக்கு இடையே திடீரென தகராறு வெடித்தது. அதற்கு, காஞ்சி கோயில் செயல் அலுவலரின் தூண்டுதலில், கோயில் மணியக்காரரின் செயல்பாடு இருந்ததாக புகார் எழுந்தது.

நம்மாழ்வார் சாத்துமுறை விவகாரம் தமிழ் – சம்ஸ்கிருந்த வேதங்களைச் சொல்வதற்கு இடையிலான பிரச்னையாக ஒரு புறம் கிளம்ப, இன்னொரு புறம் சாதி ரீதியான பிரச்னையாக சிலர் தூண்டிவிட்டனர். இந்நிலையில் பிரம்மோத்ஸவம் முடியும் காலம் வரை, காஞ்சியில் பரபரப்பு நிலவியதால் காவலர்கள் அதிக அளவில் பாதுகாப்புக்கு நிறுத்தப் பட்டனர்.

இந்நிலையில், ஒரு தரப்பினர் அறநிலையத்துறை ஆணையர் மற்றும் உயரதிகாரிகளுக்கு நடந்த விவகாரத்தை புகாராக அனுப்பினர். இந்நிலையில், சம்பவத்தன்று பிரச்னை ஏற்படாமல் தடுக்காத வகையிலும், பின்னணியில் இருந்து ஒரு தரப்புக்கு சாதகமாக இருப்பது போல் காட்டி, கோயில் நடைமுறையில் குழப்பத்தை விளைவித்ததாகவும் கோயில் செயல் அலுவலர் மீது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இந்த நிகழ்வின் போது, நம்மாழ்வார் சாற்றுமுறை பாதியில் நிறுத்தப் பட்டது பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த நாளிலும் அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்ய வாய்ப்பு இருந்த போதும், மெத்தனமாக செயல்பட்டு செயல் அலுவலர் பிரச்னையை மேலும் பெரிதாக்கியதால் பக்தர்கள் பலர் கொதித்துப் போயினர்

இதனிடையே காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் செயல் அலுவலர் விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார். அறநிலையத்துறை கூடுதல் இயக்குனர், இணை ஆணையர், வருவாய்க் கோட்ட அலுவலர், தாசில்தார் ஆகியோர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் காஞ்சி கோயில் செயல் அலுவலர் விஜயன் விடுப்பில் சென்றார். அவருக்கு பதிலாக குமரக் கோட்டம் செயல் அலுவலர் தியாகராஜன், காஞ்சி கோயிலின் பொறுப்பை கூடுதலாக கவனித்து வருகிறார்.

இது குறித்து இணை ஆணையர் அசோக் குமார் கூறியபோது, வரதராஜ பெருமாள் கோயிலில் நடந்த பிரச்னை தொடர்பாக விஜயன் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories