சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

avudaiyarkoil thiruperunthurai - 2026

சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கூறிய போது,

” மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் ” என்ற நூல் சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மாணிக்கவாசகரை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்நூலின் ஆசிரியர் பத்மாவதி செயல்பட்டுள்ளார்.

சிவபெருமான் சோதி வடிவமாக அதாவது அருவமாக அருள்செய்யும் அற்புதத் தலம் திருப்பெருந்துறை. இத்தலத்தில் சிவலிங்கம் இல்லாது இருப்பதால் அது சிவ பெருமான் ஆலயம் இல்லை என்று முனைவர் பத்மாவதி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாது மாணிக்கவாசகரே திருப்பெருந்துறையை சாஸ்தா கோயில் என்று திருவாசகத்தில் பாடியுள்ளார் என்றும், மாணிக்கவாசகர் சூழ்ச்சிக்காரர் என்றும், நரியைப் பரியாக்கிய வரலாறு பொய்க்கதை என்றும், மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனை ஆட்சியில் அமர்த்த சாணக்கியன் போன்று சூழ்ச்சி செய்வதற்காகவே தன் மனைவியுடன் மதுரையில் வந்து தங்கினார் என்றும் தவறான தகவல்களை கூறியுள்ளார்.

ALSO READ:  செங்கோட்டை - பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

சிவ பெருமான் உருவங்களில் ஒன்றான சோதி வடிவத்தை உணராது சிவ லிங்கத் திருமேனி மட்டுமே சிவாலயத்துக்கு அடையாளம் என்றும், திருப்பெருந்துறை பெருமாள் கோயில் என்றும் சைவ சமயத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் மாணிக்க வாசகரை இழித்தும் பழித்தும் எழுதியிருக்கும் அந்த நூலை சைவ சித்தாந்த பெருமன்றத்தின் சார்பாக வெளியிட்டுள்ளனர்.

இந்த அமைப்பிற்கு பின்னணியில் கம்யூனிச, கிறிஸ்தவ இயக்கங்கள் இருப்பது தெளிவாகப் புரிகிறது. தொடர்ந்து இந்து மத சிறப்புகளை, வரலாற்று நிகழ்வுகளை, மத நம்பிக்கைகளை பற்றி தவறான தகவல்களை இந்த அமைப்புகள் பரப்பும் வேலையை செய்து வருகின்றன.

பத்மாவதி் நூலில் என்ன எழுதியுள்ளார் என்பது தெரியாமல் சைவ சித்தாந்த பெருமன்றம் இந்நூலை பதித்து வெளியிட்டிருப்பதாகக் கூறுமானால், அது மிகப் பெரிய தவறு. நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர், மற்றும் நூலாசிரியர் பத்மாவதி மற்றும் இந்த அவலத்திற்கும், அறியாமைக்கும் துணை நின்றவர்கள் அனைவரும், திருப்பெருந்துறை சிவபெருமானிடமும், மாணிக்க வாசகப் பெருமானிடமும் மன்னிப்புக் கேட்டு தங்களையும், தங்களின் வழி வழி வருகின்ற வாரிசுகளையும் சிவ நிந்தையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ALSO READ:  பக்தர்கள் திரளில் மதுரை - வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

இந்த நூலினை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இக்கோரிக்கையினை முன்னிறுத்தி மயிலை கபாலீஸ்வர் கோயில், கரூர் மற்றும் திருப்பெருந்துறையில் ஆர்ப்பாட்ட ‘உண்ணாவிரதப் போராட்டங்களில் சிவனடியார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நூல் தடை செய்யப்படும் வரை அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள், சிவன் அடியார்கள் கலந்து கொள்ளும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும். தமிழக அரசு சைவ சமய பெருமையை சீர்குலைக்க நடைபெறும் சதிகளை முறியடிப்பதோடு இந்த நூலையும் உடனடியாக தடை செய்ய இந்து மக்கள் கட்சி கோருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

1 COMMENT

  1. தமிழக அரசின் அறநிலைத்துறை உடனே நடவடிக்கை எடுத்து இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories