சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

avudaiyarkoil thiruperunthurai - 2026

சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன் கூறிய போது,

” மாணிக்கவாசகரின் காலமும் கருத்தும் ” என்ற நூல் சைவ சித்தாந்த பெருமன்றம் என்ற அமைப்பின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. சைவ சமயத்தை இழிவுபடுத்தும் வகையிலும், மாணிக்கவாசகரை கொச்சைப்படுத்தும் வகையிலும் இந்நூலின் ஆசிரியர் பத்மாவதி செயல்பட்டுள்ளார்.

சிவபெருமான் சோதி வடிவமாக அதாவது அருவமாக அருள்செய்யும் அற்புதத் தலம் திருப்பெருந்துறை. இத்தலத்தில் சிவலிங்கம் இல்லாது இருப்பதால் அது சிவ பெருமான் ஆலயம் இல்லை என்று முனைவர் பத்மாவதி இந்நூலில் குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டும் இல்லாது மாணிக்கவாசகரே திருப்பெருந்துறையை சாஸ்தா கோயில் என்று திருவாசகத்தில் பாடியுள்ளார் என்றும், மாணிக்கவாசகர் சூழ்ச்சிக்காரர் என்றும், நரியைப் பரியாக்கிய வரலாறு பொய்க்கதை என்றும், மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனை ஆட்சியில் அமர்த்த சாணக்கியன் போன்று சூழ்ச்சி செய்வதற்காகவே தன் மனைவியுடன் மதுரையில் வந்து தங்கினார் என்றும் தவறான தகவல்களை கூறியுள்ளார்.

ALSO READ:  உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

சிவ பெருமான் உருவங்களில் ஒன்றான சோதி வடிவத்தை உணராது சிவ லிங்கத் திருமேனி மட்டுமே சிவாலயத்துக்கு அடையாளம் என்றும், திருப்பெருந்துறை பெருமாள் கோயில் என்றும் சைவ சமயத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும் மாணிக்க வாசகரை இழித்தும் பழித்தும் எழுதியிருக்கும் அந்த நூலை சைவ சித்தாந்த பெருமன்றத்தின் சார்பாக வெளியிட்டுள்ளனர்.

இந்த அமைப்பிற்கு பின்னணியில் கம்யூனிச, கிறிஸ்தவ இயக்கங்கள் இருப்பது தெளிவாகப் புரிகிறது. தொடர்ந்து இந்து மத சிறப்புகளை, வரலாற்று நிகழ்வுகளை, மத நம்பிக்கைகளை பற்றி தவறான தகவல்களை இந்த அமைப்புகள் பரப்பும் வேலையை செய்து வருகின்றன.

பத்மாவதி் நூலில் என்ன எழுதியுள்ளார் என்பது தெரியாமல் சைவ சித்தாந்த பெருமன்றம் இந்நூலை பதித்து வெளியிட்டிருப்பதாகக் கூறுமானால், அது மிகப் பெரிய தவறு. நூலை வெளியிட்ட பதிப்பாசிரியர், மற்றும் நூலாசிரியர் பத்மாவதி மற்றும் இந்த அவலத்திற்கும், அறியாமைக்கும் துணை நின்றவர்கள் அனைவரும், திருப்பெருந்துறை சிவபெருமானிடமும், மாணிக்க வாசகப் பெருமானிடமும் மன்னிப்புக் கேட்டு தங்களையும், தங்களின் வழி வழி வருகின்ற வாரிசுகளையும் சிவ நிந்தையில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

இந்த நூலினை உடனடியாக தடைசெய்ய வேண்டும். இக்கோரிக்கையினை முன்னிறுத்தி மயிலை கபாலீஸ்வர் கோயில், கரூர் மற்றும் திருப்பெருந்துறையில் ஆர்ப்பாட்ட ‘உண்ணாவிரதப் போராட்டங்களில் சிவனடியார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நூல் தடை செய்யப்படும் வரை அனைத்து ஆலயங்களிலும் பக்தர்கள், சிவன் அடியார்கள் கலந்து கொள்ளும் கூட்டு பிரார்த்தனை நடத்தப்படும். தமிழக அரசு சைவ சமய பெருமையை சீர்குலைக்க நடைபெறும் சதிகளை முறியடிப்பதோடு இந்த நூலையும் உடனடியாக தடை செய்ய இந்து மக்கள் கட்சி கோருகிறது என்று அவர் கூறியிருக்கிறார்.

1 COMMENT

  1. தமிழக அரசின் அறநிலைத்துறை உடனே நடவடிக்கை எடுத்து இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூன் 20 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 19 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories