கடையநல்லூர் பாத்திமா பாராமெடிகல் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவியர் பரிதாபம்!

fathima pharmacy coollege - 2026

கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லூரியில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் 137 மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி மீத இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மாணவர்கள் செலுத்திய பணத்தை மீட்டு, படிப்பைத் தொடர மாற்றுவழி ஏற்பாடு செய்து தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கே 2014ஆம் ஆண்டு முதல் 2018-வரை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 2014-2015ஆம் கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி யுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டது.

இதனால் இங்கே சேர்ந்த பயின்று வரும் 137 மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டதுடன் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. படிப்பைத் தொடர முடியாமலும் , தேர்வு எழுத முடியாமலும் உள்ளது.

ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம்  ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணமாக வசூலித்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிய பணம் திரும்பக் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

1 COMMENT

  1. கல்விக்கூடங்களில் கொள்ளை என்ற செய்தி அதிகமாக வருகிறது. தக்க நடவடிக்கை எடுத்து, அந்த நிர்வாகத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும், அத்துடன் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கும் அரசு உதவ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories