கடையநல்லூர் பாத்திமா பாராமெடிகல் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவியர் பரிதாபம்!

fathima pharmacy coollege - 2026

கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லூரியில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் 137 மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி மீத இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மாணவர்கள் செலுத்திய பணத்தை மீட்டு, படிப்பைத் தொடர மாற்றுவழி ஏற்பாடு செய்து தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கே 2014ஆம் ஆண்டு முதல் 2018-வரை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 2014-2015ஆம் கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி யுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டது.

இதனால் இங்கே சேர்ந்த பயின்று வரும் 137 மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டதுடன் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. படிப்பைத் தொடர முடியாமலும் , தேர்வு எழுத முடியாமலும் உள்ளது.

ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம்  ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணமாக வசூலித்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிய பணம் திரும்பக் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

1 COMMENT

  1. கல்விக்கூடங்களில் கொள்ளை என்ற செய்தி அதிகமாக வருகிறது. தக்க நடவடிக்கை எடுத்து, அந்த நிர்வாகத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும், அத்துடன் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கும் அரசு உதவ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories