February 22, 2026, 1:05 AM
26.7 C
Chennai

கடையநல்லூர் பாத்திமா பாராமெடிகல் கல்லூரி அங்கீகாரம் ரத்து: மாணவியர் பரிதாபம்!

fathima pharmacy coollege - 2026

கடையநல்லூர்: நல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லுாரி அங்கீகாரம் திடீர் ரத்து ஆனதில், 137 மாணவ, மாணவிகள் நிலை பரிதாபமாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் செயல்பட்டு வரும் பாத்திமா பார்மசி பாரா மெடிக்கல் கல்லூரியில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என கூறி அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டதால் 137 மாணவர்களின் படிப்பு மற்றும் அவர்களது வாழ்க்கை கேள்விக்குறி ஆகியுள்ளது. மேலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தக் கல்லூரி மீத இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து மாணவர்கள் செலுத்திய பணத்தை மீட்டு, படிப்பைத் தொடர மாற்றுவழி ஏற்பாடு செய்து தருமாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் பாத்திமா பார்மசி கல்லூரி செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப் பட்டதைத் தொடர்ந்து இங்கே 2014ஆம் ஆண்டு முதல் 2018-வரை மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 2014-2015ஆம் கல்வியாண்டில் உள்ள மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதி யுள்ளனர். இந்நிலையில் கல்லூரியில் தேவையான அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை எனக் கூறி எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் கல்லூரியின் அங்கீகாரத்தை ரத்து செய்துவிட்டது.

இதனால் இங்கே சேர்ந்த பயின்று வரும் 137 மாணவ மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டதுடன் வாழ்க்கையும் கேள்விக்குறி ஆகியுள்ளது. படிப்பைத் தொடர முடியாமலும் , தேர்வு எழுத முடியாமலும் உள்ளது.

ஒவ்வொரு மாணவரிடம் இருந்தும் சுமார் 80 ஆயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம்  ரூபாய் வரை கல்லூரி நிர்வாகம் கட்டணமாக வசூலித்து பல கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

உடனடியாக இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து, மாணவர்கள் தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், கட்டிய பணம் திரும்பக் கிடைக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

1 COMMENT

  1. கல்விக்கூடங்களில் கொள்ளை என்ற செய்தி அதிகமாக வருகிறது. தக்க நடவடிக்கை எடுத்து, அந்த நிர்வாகத்துக்கு தண்டனை கொடுக்க வேண்டும், அத்துடன் அந்த மாணவர்களின் எதிர்காலத்துக்கும் அரசு உதவ வேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories