கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க நீதிமன்றம் பரிந்துரை!

Published:

12 Aug 05 High court - 2026

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி அருகே கருனாநிதி உடலை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் அனுமதி அளித்து, அரசுக்கும் பரிந்துரை செய்தது.

stalin - 2026
பெரும் போராட்டத்திற்கு பிறகு, திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதையடுத்து, மு.க.ஸ்டாலின் உணர்ச்சிவசப்பட்டு அழுகிறார்.

இதற்காக வழக்கு நடைபெற்று காலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. தமிழக அரசின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பெரும் தயக்கத்துக்குப் பின் இந்த முடிவினை அறிவித்தனர்.

கருணாநிதி உடலை அண்ணா நினைவகம் அருகே அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று துரைமுருகன் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக கருணாநிதி உடல் வைக்கப்பட்டுள்ள ராஜாஜி ஹாலில் பேசிய துரைமுருகன் தகவல் தெரிவித்தார்.

துரைமுருகன் கூறியதைக் கேட்டு ஸ்டாலின், ஆ.ராசா, ஆர்.எஸ் பாரதி உள்ளிட்ட தி.மு.கவினர் உணர்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டனர்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img