தற்போதைக்கு திமுகவில் என்னை இணைப்பதாக தெரியவில்லை என்று மு.க. அழகிரி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
திமுக.,தலைவர் கருணாநிதி மறைந்த பின்னர், குடும்பத்தினர் ஒன்றாகச் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கப் பட்டது. தொடர்ந்து, அழகிரிக்கு மீண்டும் திமுக.,வில் இடம் கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால், அழகிரியை திமுக.,வில் சேர்ப்பதற்கு சிலர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தன்னை தற்போதைக்கு திமுக.,வில் இணைப்பதாகத் தெரியவில்லை என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ள மு.க.அழகிரி, செப்.5ஆம் தேதி பேரணிக்கு பிறகு அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன் என்று கூறியுள்ளார்.



