செங்கோட்டை மேலூரில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு: இரு தரப்பு மோதலில் 10 பேர் காயம்!

sengottai vinayakar damaged by islamic stone peltors - 2026

செங்கோட்டை: நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

செங்கோட்டை மேலூரில் இன்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கல்வீச்சு நடந்ததில் விநாயகர் சிலை சேதமடைந்தது. இது பக்தர்கள் மனதை வெகுவாகப் புண்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை மேலூரில் வீர விநாயகர் பக்தர்கள் சார்பாக விநாயகர் பிரதிஷ்டை செய்யப் பட்டு, அதற்கான ஊர்வலம் இன்று மாலை துவங்கியது.

சுமார் 8 மணி அளவில் ஊர்வலம் வழக்கமான ஊர்வலப் பாதையான, பள்ளிவாசலை அடுத்த பெரிய தெரு வழியாக வந்த போது சுமார் 200 இஸ்லாமிய சமூகத்தினர் தெரு முனையில் நின்று கொண்டு, ஊர்வலம் இந்த வழியே செல்லக் கூடாது என்று வழி மறித்தனர்.

ஆனால், இது வழக்கமான பாதை என்றும், போலீஸ் அனுமதியுடன் இந்த ஊர்வலம் நடப்பதாகவும் ஊர்வலத்தில் முன்நின்று சென்றவர்கள் கூறினர்.

senkottai urvalam vinayakar - 2026

விநாயகரின் ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் முன்னே சென்று கொண்டிருந்தனர். விநாயகர் சிலைக்குப் பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் தொடர்ந்து வந்தனர். இதனால் ஊர்வலத்தினர் அதிகம் இருந்த போதும், இஸ்லாமிய சமூகத்தினர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் எழுந்தது.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

இத்தகைய சூழலை காவல் துறையினர் எதிர்பார்க்கவில்லை. உதவி ஆய்வாளர் தமிழ், ஆய்வாளர் சுரேஷ் குமார் உள்ளிட்ட அதிகாரிகளுடன் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவிலேயே காவலர்கள் இருந்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகள் முன்வந்து இருதரப்பிலும் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து சமரச முயற்சிக்கு போலீஸார் முயன்றதும், ஒரு கட்டத்தில், ஊர்வலத்தை தொடர்ந்து நடத்துவது என தீர்மானமாகி, ஊர்வலம் அமைதியாகத் தொடர்ந்தது.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர், ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடி, அருகே வீடு கட்டுவதற்காக என்று தயாராக குவித்து வைக்கப் பட்டிருந்த செங்கற்கள், மணல், ஜல்லி ஆகியவற்றை, ஊர்வலத்தினர் மீது வீசியெறியத் தொடங்கினர்.

senkottai urvalam vinayakar2 - 2026

செங்கல்லும் மண்ணும் விநாயகர் மீதும் விழுந்து விநாயகர் சிலையும் சிறிது சேதம் அடைந்தது. விநாயகர் சிலை மீது கற்கள் விழுந்ததால் ஆத்திரமடைந்த ஊர்வலத்தினர், தாங்களும் கற்களை எடுத்து சரமாரியாக எறியத் தொடங்கினர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

நிலைமையை காவல்துறையினரால் சமாளிக்க இயலவில்லை. கற்கள் எறியப் பட்டதில் உதவி ஆய்வாளர் தமிழ்ச் செல்வனுக்கு காயம் ஏற்பட்டது. இதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தத் தொடங்கினர். இருப்பினும், இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை எடுத்து வீசியதில், இரு தரப்பிலும் சேர்ந்து சுமார் பத்து பேருக்கு காயம் ஏற்பட்டது. தடியடி நடத்திய ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸாருக்கும் காயம் ஏற்பட்டது.

ALSO READ:  வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

இதனிடையே பள்ளிவாசலை அடுத்துள்ள தெருவின் முகப்பில் இருந்த கட்சிக் கொடிக் கம்பங்கள் அனைத்தும் சாய்க்கப் பட்டன. இரும்புக் கம்பங்கள் வளைத்து சாலையை மறித்தார்ப்போல் சாய்க்கப் பட்டன. அங்கங்கே கற்கள் சிதறிக் கிடந்தன. மசூதி பகுதியை ஒட்டி வைக்கப் பட்டிருந்த வாகனங்கள், வீடுகளின் முகப்பும் ஊர்வலம் வந்தவர்களின் கல்வீச்சில் தப்பவில்லை. இந்தக் கல்வீச்சில் செய்தியாளர்களின் வாகனங்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், 10 கார்கள், 3 ஆட்டோக்கள் சேதமடைந்தன.

இதை அடுத்து போலீஸார் அளித்த தகவலின் பேரில் கூடுதல் படைகள் அங்கே குவிக்கப் பட்டன. இரு தரப்பு மோதலால் அந்த இடமே பதற்றத்துக்கு உள்ளானது. இருப்பினும், இரு தரப்பினரும் சிறு சிறு குழுக்களாக அங்கங்கே நின்றபடி பேசிக் கொண்டிருந்ததால் மேலும் கலவரம் வெடிக்கும் சூழல் நிலவியது.

இந்நிலையில் இஸ்லாமிய தரப்பின் அடாவடிப் போக்கை கண்டித்து தாலுகா அலுவலகம் அருகே 50க்கும் மேற்பட்ட பெண்கள் போலீஸாரை முற்றுகையிட்டு காலைக்குள் நிலவரம் சரியாக வேண்டும்; ஊர்வலம் எந்த அசம்பாவிதமும் இன்றி நிறையவடைய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

இதனிடையே செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே இருந்த ஏடிஎம் அறை ஒன்று கல்வீசித் தாக்கப் பட்டது. இதில் ஏடிஎம் அறை கண்ணாடிகள் நொறுங்கின.

இந்நிலையில் விநாயகர் கமிட்டி அமைப்பினரை அவரவர் இடங்களுக்கு கலைந்து செல்லுமாறு வற்புறுத்திய போலீஸார், இரவு நேரத்தில் அசம்பாவிதம் ஏதும் நேராமல் பாதுகாப்பை பலப்படுத்தி வருகின்றனர்.

4 COMMENTS

  1. Islamic fundamentals are the most dangerous people in the world. I hope now the Veeramani and his gang of rowdies will keep their mouth shut. The instigators of violence should be arrested without showing any mercy.

  2. இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு ஹிந்துக்கள் விழிப்புணர்வு பெறுவது மட்டுமே. இஸ்லாமியர்கள் தங்கள் கொள்கைகளில் காட்டும் தீவிரத்தை இனிமேல் நாமும் க
    காட்டவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories