பிளாஸ்டிக் கழிவுகளால் வன உயிரினங்களுக்கு ஆபத்து! #ஸேவ்_ஒகேனக்கல்!

hokenakkal forest - 2026

ஒகேனக்கல் வனப்பகுதியில் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாக்கெட் வாட்டர் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச் சூழல் சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல் காவிரி நீர்வீழ்ச்சிக்கு தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சென்னை, மதுரை, என தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடக, பாண்டிச்சேரி போன்ற பல அண்டை மாநிலங்களில் இருந்தும் தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடர்ந்த வனப்பகுதியால் சூழப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் செல்வதற்கு பென்னாகரத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் செக்போஸ்ட் உள்ளது . அங்கிருந்து 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அடர்ந்த வனப் பகுதியாகும். இந்த வனப்பகுதி முழுவதும் தருமபுரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

இரவு நேரங்களில் வனவிலங்குகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் சுற்றுலா வரும் பயணிகளால் வன விலங்குகளின் உயிருக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாமல் இருக்க வனத்துறையின் சார்பில் 12 கிலோமீட்டர் தூரத்திற்கு வழி நெடுகிலும் சிமெண்ட்டால் ஆன பாதுகாப்பு விழிப்புணர்வு போர்டுகள், இரும்பு தகடுகளால் ஆன வன விலங்குகள் பதித்த போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

அப்படி இருந்தாலும் பிளாஸ்டிக் கழிவுகளால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் சுற்றுலா வரும் பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி அவர்கள் கொண்டு வரும் உணவு வகைகளை சாப்பிட்டு விட்டு பிளாஸ்டிக் கழிவுகளை வனப்பகுதியிலேயே போட்டுவிட்டு செல்கின்றனர்.

மேலும் சுற்றுலா வரும் மதுபான பிரியர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட் ஆகிய கழிவுகளை போட்டுவிட்டு செல்கின்றனர்.

இது போதாதென்று, கடந்த வாரம் விநாயகர் சதுர்த்தி  கொண்டாடிய பொதுமக்கள் விநாயகர் சிலையை காவிரியில் கரைப்பதற்கு  வந்து சென்ற போது, அவர்களும் தங்கள் பங்குக்கு சாலையின் இரு புறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட் கழிவுகளை வீசி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

ALSO READ:  நல்ல வாய்ப்பை வீணடித்து விட்டார்கள் இண்டி கூட்டணியினர்!

இந்த பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்களால் வன விலங்குகளின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் வனத்துறையினர் கழிவுகளை அப்புறப்படுத்தி, வனப்பகுதியை தூய்மையாக வைத்துக் கொள்ளாமலும், மது குடித்து விட்டு பாட்டில்களை வீசிச் செல்லும் சமுக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் மெத்தனப் போக்கோடு இருக்கின்றனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் நேரில் ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும், நல்லெண்ணம் கொண்ட சுற்றுலா பயணிகள் சிலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

அண்ணாமலை தமிழக முதலமைச்சராக வேண்டுமா இல்லையா?

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக-வுக்கு மாறான ஒரு ஆட்சியை விரும்புகிற விவரம் தெரிந்தவர்களில் பலர், அதற்குத் தமிழக பாஜக-வை விட அண்ணாமலையை அதிகமாக நம்பலாம். இதுவும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்க ஊக்கம் அளித்திருக்கும்.

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

Entertainment News

Popular Categories