ஸ்டாலின் வழியில் தமிழிசை! ஆட்டோ ஓட்டுநர் வீடு தேடிச் சென்று.. ஸ்வீட் கொடுத்து… ஆறுதல்!

tamilisai kathir - 2026

சென்னை: திமுக., தலைவர்  மு.க. ஸ்டாலின் வழியில் அரசியல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார் தமிழக பாஜக., தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன். பிரியாணி கடையில் திமுக.,வினர் ஓசி பிரியாணி கேட்டு கடைக்காரர்களை கும்மாங்குத்து குத்திய வீடியோக்கள் வைரலானதும், பிரியாணிக் கடைக்கே ஓடோடிச் சென்று அடிபட்ட கடைக்காரரை சந்தித்து ஆறுதல் கூறினார் ஸ்டாலின்.

இப்போது தமிழக பாஜக., தலைவர் தமிழிசையின் முறை. பாஜக., நபரால் தள்ளிக் கொண்டு ஓரங்கட்டப் பட்ட ஆட்டோ டிரைவரை வீடு தேடிச் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார் தமிழிசை.

சென்னையில் ஜாபர்கான்பேட்டை அருகே விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான தெருகூத்து நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக.,வின் மாநில தலைவர் தமிழிசை கலந்து கொண்டார். அப்போது ஊடகத்தினர் தமிழிசையிடம் கேள்வி எழுப்பினர். அந்நேரம், தமிழிசையின் பின்புறம் நின்று கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் கதிர் என்பவர், ஆர்வக் கோளாறில், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு புன்முறுவல் செய்து சூழலைத் தவிர்த்தார் தமிழிசை. ஆனால் அதே நேரம் அருகே நின்றிருந்த பாஜக., பிரமுகர்,  கதிரைப் பிடித்து நெம்பித் தள்ளி அங்கிருந்து அப்புறப் படுத்தினார். இது சமூக வலைத் தளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை ஆட்டோ டிரைவரின் வீட்டுக்குச் சென்ற  தமிழிசை  அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். கையில் ஸ்வீட் பாக்ஸுடன் சென்ற தமிழிசை,  தனது பக்கத்தில் கதிரை உட்காருமாறு கூறினார். குடும்பத்தினருக்கு இனிப்பு வழங்கினார். மேலும் கதிர் கேட்ட கேள்வியில் தவறில்லை என்றும் கூறினார்.

ஆட்டோ டிரைவரைப் பிடித்து தள்ளிக் கொண்டு போன (இடதுபுறத்தில் அமர்ந்திருப்பர்) நபர் தமிழிசையிடம் கதிரை அறிமுகப்படுத்தி இவர் நமது கட்சி பிரசாரத்துக்கு ஆட்டோ ஓட்டினார் என்றார்.

இந்த சந்திப்பு தொடர்பான வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தமிழிசை!

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories