December 6, 2025, 9:37 AM
26.8 C
Chennai

தூத்துக்குடியில் ஆளுநர்; சிறப்பான வரவேற்பு!

IMG 20181012 WA0005 - 2025தூத்துக்குடிக்கு வந்த தமிழக ஆளுநருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி அளவில் நெல்லையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்தார். அவருக்கு மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மாவட்ட எஸ்பி முரளி ரம்பா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். பின்னர் 10 மணிக்கு சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி முன்பாக ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் வாங்கப்பட்டுள்ள 18 வாகனங்களின் தூய்மைப் பணியை துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து மாணவர்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்பு உணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் மாநகராட்சி சிறப்பு தேவையுள்ள குழந்தைகள் பள்ளி மாணவர்களை சந்தித்தார், இதைத் தொடர்ந்து மாணவர்களை வகுப்பறையில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

பின்னர் தமிழக அரசின் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் குழநதைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை பரிசோதித்தார்.

இதைத் தொடர்ந்து தமிழக ஆளுநர் முன்னிலையில் தூய்மை பாரத இயக்கம் உறுதி மொழியை மாணவர்கள் எடுத்துக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து 10-30 மணி அளவில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பஸ் நிலையத்தில் இருந்த குப்பைகளை அகற்றிய அவர், அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பிளாஸ்டிக் ஒழிக்க கேட்டுக் கொண்டார்.

பின்னர் பழைய மாநகராட்சியில் உள்ள ஆரம்ப சுகாதர நிலையத்தில் ஆய்வு மேற்க்கொண்டார்.

பின்னர் அரசு சுற்றுலா மாளிகையில் அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories