போலீஸ்காரர் வீட்டில் திருடிய 2 பேர் கைது: 35 பவுன் நகை, ரூ.1 லட்சம் மீட்பு

arrested - 2026

குளித்தலை போலீசார் கடந்த சிலநாட்களுக்கு முன்னர் குளித்தலை- முசிறி சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த இருவரை பிடித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நாகப்பட்டினம் அருகே உள்ள சீயாத்தமங்கை பகுதியை சேர்ந்த காமராஜ் மகன் சீனி (என்கிற) சீனிவாசன்(வயது 28), துறையூர் பகுதியை சேர்ந்தவரும் தற்போது குளித்தலை அருகே உள்ள தண்ணீர்பள்ளியில் வசித்து வரும் நடராஜன் மகன் சுரேஷ் (என்கிற) பச்சமுத்து(30) என்பதும் தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் வந்த மோட்டார் சைக்கிளை திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து திருடி வந்ததும், குளித்தலை காவிரிநகர் பகுதியில் வசிக்கும் தோகைமலை போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு தலைமை காவலராக பணிபுரியும் ராஜேந்திரன் வீட்டில் நடந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.

இதேபோல் கரூர் மாவட்டம் பாலவிடுதி, லாலாபேட்டை, மாயனூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து அவர்களிடமிருந்து மொத்தம் 35 பவுன் தங்க நகைகள், ரூ.1 லட்சம், ஒரு கணினி, திருடி ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை மீட்ட போலீசார் அவர்களை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்கள் இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories