February 20, 2026, 12:56 AM
26.4 C
Chennai

கோவை அருகே கிராமப் பகுதியில் தொடரும் யானைத் தொல்லை! பொதுமக்கள் பீதி!

elephantkovai2 - 2026

கோவை அருகே வன எல்லையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் தொடரும் யானைத் தொல்லையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோவை அடுத்த மாங்கரை,பெரியதடாகம் பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கிராமங்களில் நாள்தோறும் காட்டு யானைகள் ஊருக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது.

நள்ளிரவில் ஊருக்குள் யானைகள் வந்த நிலை மாறி மாலை நேரங்களிலேயே ஊருக்குள் காட்டு யானைகள் புகுவது தொடர்கிறது. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு 7.30 மணி அளவில் கணுவாய் அடுத்த சோமையனூர் பழனியப்பா லே அவுட் பகுதியில் ஒரு குட்டி யானை மற்றும் அதன் யானையானையிடன் புகுந்தது.

ஒவ்வொரு வீதியாக வலம் வந்த யானைகள் சங்கர் என்பவரது வீட்டின் முன்புறம் இருந்த பப்பாளி மரத்தை முறித்து சப்பிட்டது.இதனால் வீட்டில் இருந்தவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர்.

இதனையடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளித்ததை தொடர்ந்து அங்கு வந்த வேட்டை தடுப்பு காவலர்கள்,வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.இதனையடுத்து அங்கிருந்து சென்ற யானைகள் அருகில் இருந்த செங்கல் சூளைக்குள் புகுந்து அங்கிருந்த பன மரக்கூழை சாப்பிட்டது.அங்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் பட்டாசு வெடித்து விரட்டினர்.

நாள்தோறும் யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.மேலும் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்த உள்ளதாக எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories