தீபாவளி -டாஸ்மாக் கடைகளில் 4 நாட்களில் ரூ.602 கோடிக்கு மது விற்பனை!

Published:

IMG 20181008 141253 - 2026தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நான்கு நாட்களில் மட்டும் 602 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களில் டாஸ்மாக் கடைகளில் குடிபிரியர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால் அதிக அளவில் விற்பனை செய்வதற்கு இலக்கு நிர்ணயிக்கப்படும்.

அவ்வகையில் இந்த ஆண்டு டாஸ்மாக் நிர்வாகம் ரூ.350 கோடிக்கு மது விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியானது.

IMG 20181008 141319 - 2026அதற்கு ஏற்ப தீபாவளி பண்டிகையையொட்டி 4 நாட்கள் விடுமுறை என்பதால் விற்பனை களைகட்டியது. குறிப்பாக தீபாவளி நாளான நேற்று காலை முதல் இரவு வரை டாஸ்மாக் கடைகள் திருவிழா போன்று காட்சியளித்தது.

இந்நிலையில், தீபாவளியையொட்டி தமிழகத்தில் 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது

இதில் நவ.3 ம் தேதி ரூ.124 கோடியும், நவ 4ம் தேதி ரூ.148 கோடியும், நவ.5ம் தேதி ரூ.150 கோடியும் மற்றும்
நவ.6 ம் தேதி ரூ.180 கோடியும் என 4 நாட்களில் ரூ. 602 கோடிக்கு டாஸ்மாக்கில் மதுவிற்பனையாகி உள்ளது.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இது கடந்த ஆண்டைவிட தீபாவளியின் போது மது வருவாய் 34% அதிகரித்துள்ளது என்று டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related articles

Recent articles

spot_img