January 19, 2025, 9:48 AM
25.7 C
Chennai

ஜெயகாந்தன் மறைவு: ராமதாஸ் இரங்கல்

எழுத்தாளார் ஜெயகாந்தன் மறைவுக்கு பாமக நிறுவுனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில்….
தலைசிறந்த தமிழ் எழுத்தாளரான ஜெயகாந்தன் உடல்நலக் குறைவால் சென்னையில்  காலமானார் என்ற செய்தி கேட்டு பெரும் அதிர்ச்சியும், வேதனையும், துயரமும் அடைந்தேன்.
தமிழ் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமானால் ஜெயகாந்தனை தவிர்த்துவிட்டு எழுத முடியாது. 145 சிறுகதைகளையும், 41 புதினங்களையும் எழுதியவர். நான்கு தலைப்புகளில் தமது வாழ்க்கை அனுபவங்களை பதிவு செய்தவர். இவரது படைப்புகள் ஒவ்வொன்றிலும் வாழ்க்கைக்குத் தேவையான ஏதேனும் ஒரு பாடம் நிச்சயமாக இருக்கும்.
ஞானபீட விருதையும், சாகித்ய அகாடமி விருதையும் பெற்றவர். பொதுவுடமைக் கொள்கைகளில் நம்பிக்கைக் கொண்டவர் என்ற போதிலும், காமராஜரின் அன்புக்கு பாத்திரமாகி அக்கட்சிக்காக உழைத்தவர்.
புகழின் உச்சங்களைத் தொட்டவர் என்ற போதிலும் எளிமையானவர்; யதார்த்தமானவர். எந்தக் காலத்திலும் தமது சுயமரியாதையை விட்டுக் கொடுக்காதவர். இவரது மறைவு இலக்கிய உலகிற்கு  ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
எழுத்தாளர் ஜெயகாந்தனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலக்கிய உலகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics