திருநாடலங்கரித்த ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர்: வாழ்க்கைக் குறிப்பு!

 

srirangam ranganarayana jeer ritual - 2026

ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது. 50ஆம் பட்டம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி திருநாட்டை அலங்கரித்தார். 1989-2018, 29 ஆண்டுகள் பட்டத்தை அலங்கரித்தார். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ஜீயர் சுவாமியின் விமல சரம திருமேனி அவரது திருவரசில் (வட திருக்காவேரிக்கரையில் ) திருப்பள்ளிப் படுத்தப்படும்.

அவரைப் பற்றிய ஒரு சிறு குறிப்பு:

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் (50ஆவது பட்டம்) ஸ்வாமியின் பல்வேறு அறப்பணிகள்:

ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் திருவரங்க நாதனுக்கு நம் சுவாமியின் சமர்ப்பணமாகும்

srirangam ranganarayana jeer - 2026

நம்பெருமாளின் திருப்பணிகளில் ஈடுபடுத்திக் கொண்ட ஜீயர்களின் வரிசையில் தன்னைப் பூரணமாக அர்ப்பணித்துக் கொண்டு அரங்கனுக்குக் கைங்கர்யம் செய்ய வந்த ஐம்பதாவது பட்டம் ஸ்ரீமத் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமிகளின் திருப் பணிகளையும், ஈடு பாட்டையும் ஈண்டு காண்போம்.

நயினார்பாளையம் என்ற சிற்றூரில் ஒரு வைதிக குடும்பத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணமாசார்யருக்கும், சௌ பாக்கியவதி சேஷலட்சுமிக்கும் 3.12.1929-இல் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தையின் தோற்றத்தைக் கண்ட பெரியோர்கள் ஆண்டவனுக்குக் கைங்கர்யம் செய்யவே பிறந்த குழந்தை என்று ஆசிகள் வழங்கி ஸ்ரீவரதராஜன் என்று பெயர் சூட்டினர்.

இவரை அனைவரும் ஸ்ரீவரதாசார்யர் என்று அழைத்து வந்தனர். இவருக்குக் கல்வி கற்கும் பிராயம் வந்ததும் வேதத்திலும் வைதிகத்திலும் நாட்டம் அதிகமிருந்ததால் திருவரங்கத்தை அடுத்த திருவானைக்காவில் உள்ள சங்கர மடத்தில் ரிக் வேதமும், சிதம்பரத்தில் வடமொழியும் பயின்று தேர்ச்சி பெற்றார். வேதம் பயிலுகின்ற காலத்திலேயே அரங்கனை ஸேவித்து அரங்கனிடம் ஈடுபாடு கொண்டார்.

இவருடன் கல்வி பயின்றவர்களில் குறிப்பிடத்தக்கவர் தம் இறைவனடி சேர்ந்த காலம் சென்ற காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீஜயேந்திரர் . முறையாக வேதம் பயின்று கல்வியில் சிறந்தவராய் விளங்கிய இவர் பின் சிறிது காலம் சிதம்பரம் ஆர். எம்.எஸ். பாடசாலையில் சாஸ்திரமும், சித்ரகூட மஹாவித்வான் அஷ்டகோத்ரம் வேங்கடாசார்ய ஸ்வாமியிடத்தில் ஸம்பிரதாய க்ரந்தங்களையும், அருளிச் செயலையும் கற்றார்.

srirangam jeer - 2026

திருமண வயது வந்தவுடன் ஸ்வாமிகளுக்கு சார்வாய் என்ற ஊரிலுள்ள சௌபாக்யவதி ஆதிலக்ஷ்மி அம்மாளைத் திருமணம் செய்துவித்தனர். இல்லற வாழ்க்கையில் ஈடுபட்ட ஸ்வாமிக்கு மூன்று பெண் குழந்தைகளும், இரண்டு ஆண் குழந்தைகளும் பிறந்து சீரும் சிறப்புடனும் வளர்ந்து வந்தனர்.

கல்வி பயிலுகின்ற காலத்திலேயே அரங்கனிடம் ஈடுபாடு கொண்ட நம் ஜீயர் ஸ்வாமிகள் 1958-ஆம் வருடம் அரங்கன் கோயிலில் உள்ள ஸ்ரீபரமபதநாதன் ஸன்னிதியில் சிறிது காலம் திருவாராதன கைங்கர்யம் செய்து வந்தார். பின் 1959-ஆம் வருடம் கோவை சென்று ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள், ஸ்ரீவேணுகோபால சுவாமி கோயிலில் (கெரடி கோயில், கோவை) அர்ச்சக கைங்கர்யம் செய்து வந்தார்.

கோவை திருக்கோயிலில் இவர் ஆற்றிய மனப்பூர்வமான கைங்கர்யங்களினாலும், அடியார்களிடம் செலுத்திய அன்பி னாலும், இவர் முறையாக நடத்தி வைத்த ஸ்ரீசுதர்சன, அஷ்டாக்ஷர ஹோமங்களினாலும் பொதுமக்கள் ஈடுபாடு கொண்டு ஸ்வாமி களிடம் பேரன்பு கொண்டனர்.

srirangam ranganarayana jeer f - 2026

ஜீயர் ஸ்வாமிகள் பூர்வாச்ரமத்தில் பற்பல நகரங்களுக்கும் வருகை தந்து, திருநகரி, பத்ரி, ஸ்ரீரங்கம், கோவை போன்ற ஊர்களில் சிறப்பான பல ஹோமங்களை நடத்தி வைத்து பொதுமக்களை நல்வழியில் ஈடுபடுத்தியுள்ளார்.

கோவையில் தமக்குக் கிடைத்த ஏராளமான செல்வங்களைத் துறந்து அரங்கனின் ஸேவைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜீயர் ஸ்வாமிகள் தமது அறுபதாவது வயது நிறைவுற்ற உடனே கோவை மாநகரிலிருந்து புறப்பட்டுத் திருவரங்கத்திற்கு வந்து தம் நெடுநாள் விருப்பப்படி உடையவர் ஸன்னிதியில் காஷாயம் ஏற்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்க நாராயண ஜீயர் என்ற பட்டமேற்று ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்தின் ஐம்பதாவது ஜீயராக அலங்கரித்து வந்தார்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories