ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருவரசு ஏற்பாடு!

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் திருநாட்டை அலங்கரித்த பின்னர் அவரது திருவரசு பணிகள் நடைபெற்று வருகின்றன..

ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரி (கொள்ளிடம் ஆற்றங்கரை) அருகில் உள்ள மடத்தின் தோப்பில், ஆளவந்தார் சுவாமி திருவரசுக்கு தெற்கே, 49 ஆம் ஸ்ரீரங்கம் ஜீயர் பட்டம் திருமலை சுவாமிகள் திருவரசுக்கு வடக்கே நமது 50ஆம் பட்டம் சுவாமிகள் திருவரசு கொள்ள சித்தமாகி உள்ளது ..

sriranganarayanajeer - 2026

நம் ஸ்ரீவைஷ்ணவ பேரொளி ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய பல வித கொத்துக்கள் எனப்படுகின்ற தனித் தனி மேலாண்மைகளை உருவாக்கி வைத்தார் . அதில் ஒன்றான இந்த ஸ்ரீரங்க நாராயணர் மடம் உருவாக்கப்பட்டு, பிரதி வெள்ளிக்கிழமை புனுகு காப்பு நம்பெருமாளுக்கு சாற்றப்பட்டு திருஆலவட்ட (விசிறி சாமரம் வீசுதல்) கைங்கரியம், திருவாராதனமும் , நம்பெருமாள் முன்பு பாராயண கோஷ்டி கைங்கரியமும், கோவில் நகை பாதுகாப்பு அறை முக்கிய சாவி (பல சாவிகள் இருக்கும் ) அதற்கு முத்திரை இடும் அதிகாரம் போன்ற கைங்கரியங்களை இந்த மடத்தை அலங்கரிக்கும் ஜீயர் செய்து வர ராமானுஜர் பணித்துள்ளார்.

சுவாமி தற்போது வசித்து வந்த இந்த இடம் ராமானுஜர் காலத்துக்கு முன்பே சுமார் 9 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளை சுவாமிகளின் பல்லக்கை(கடைசி படத்தில்) பூக்களால் அலங்கரித்து உத்தர வீதி மற்றும் சித்திர வீதிகளில் உலா வந்த பின்னர் அவரது திருமேனியை அதில் ஏற்றி திருவரசு பண்ணப்படும் இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

sriranganarayanajeer2 - 2026

இந்தப் பூப் பல்லாக்கு “பிரும்ம ரதம் ” என வைகுண்டம் செல்லும் ரதம் என்பதாக அழைக்கப்படும். இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம்.

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories