ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர் திருவரசு ஏற்பாடு!

ஸ்ரீரங்க நாராயண ஜீயர் திருநாட்டை அலங்கரித்த பின்னர் அவரது திருவரசு பணிகள் நடைபெற்று வருகின்றன..

ஸ்ரீரங்கம் வடதிருக்காவேரி (கொள்ளிடம் ஆற்றங்கரை) அருகில் உள்ள மடத்தின் தோப்பில், ஆளவந்தார் சுவாமி திருவரசுக்கு தெற்கே, 49 ஆம் ஸ்ரீரங்கம் ஜீயர் பட்டம் திருமலை சுவாமிகள் திருவரசுக்கு வடக்கே நமது 50ஆம் பட்டம் சுவாமிகள் திருவரசு கொள்ள சித்தமாகி உள்ளது ..

sriranganarayanajeer - 2026

நம் ஸ்ரீவைஷ்ணவ பேரொளி ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோவில் திருப்பணிகளை தொடர்ந்து செய்ய பல வித கொத்துக்கள் எனப்படுகின்ற தனித் தனி மேலாண்மைகளை உருவாக்கி வைத்தார் . அதில் ஒன்றான இந்த ஸ்ரீரங்க நாராயணர் மடம் உருவாக்கப்பட்டு, பிரதி வெள்ளிக்கிழமை புனுகு காப்பு நம்பெருமாளுக்கு சாற்றப்பட்டு திருஆலவட்ட (விசிறி சாமரம் வீசுதல்) கைங்கரியம், திருவாராதனமும் , நம்பெருமாள் முன்பு பாராயண கோஷ்டி கைங்கரியமும், கோவில் நகை பாதுகாப்பு அறை முக்கிய சாவி (பல சாவிகள் இருக்கும் ) அதற்கு முத்திரை இடும் அதிகாரம் போன்ற கைங்கரியங்களை இந்த மடத்தை அலங்கரிக்கும் ஜீயர் செய்து வர ராமானுஜர் பணித்துள்ளார்.

சுவாமி தற்போது வசித்து வந்த இந்த இடம் ராமானுஜர் காலத்துக்கு முன்பே சுமார் 9 ஆம் நூற்றாண்டில் சேர மன்னர்களால் உருவாக்கப்பட்டது. நாளை சுவாமிகளின் பல்லக்கை(கடைசி படத்தில்) பூக்களால் அலங்கரித்து உத்தர வீதி மற்றும் சித்திர வீதிகளில் உலா வந்த பின்னர் அவரது திருமேனியை அதில் ஏற்றி திருவரசு பண்ணப்படும் இடத்திற்கு மாலை நான்கு மணிக்கு எடுத்து செல்லப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

sriranganarayanajeer2 - 2026

இந்தப் பூப் பல்லாக்கு “பிரும்ம ரதம் ” என வைகுண்டம் செல்லும் ரதம் என்பதாக அழைக்கப்படும். இதை தரிசிப்பது மிகுந்த புண்ணியம்.

– விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories