கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!

church of india - 2026

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ்  கத்தோலிக்க சர்ச் விடுதியிலுள்ள 44 வயதுடைய கன்யாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் தன்னை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கன்யாஸ்த்ரீயை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து, இந்த வார இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிஷப் குருவிலாங்காடு விடுதிக்கு 13 முறை வந்து தங்கி உள்ளதற்கான ஆதாரமாக, அந்த விடுதியின் வருகைப் பதிவேடில் குறிக்கப் பட்ட குறிப்புகள் உள்ளன. அவ்வாறு பிஷப் வந்து சென்றதை விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்யாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர். அந்த கன்யாஸ்த்ரி பிஷப் குறித்து சர்ச் மேலிடத்தில் புகார் தெரிவித்த போது, மற்றவர்கள் சிரித்தபடி நகர்ந்தனராம். இதனால் அந்த பிஷப்புக்கு மேலும் தைரியம் வந்தது என்றும், நிர்வாகமும் பிஷப்புக்கு உடந்தையாக இருந்தது என்பதும் கன்யாஸ்த்ரியின் குற்றச்சாட்டு.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!

கன்யாஸ்த்ரி இதனிடையே தனக்கு வேறு சர்ச்சில் இடமாற்றம் செய்து தருமாறு கோரி, வேறு சர்ச்சுக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் வந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் அந்த கன்யாஸ்திரியை பலாத்காரம் செய்தாராம்.

இதனிடையே அந்த கன்யாஸ்திரியை தாம் பணியிட மாற்றம் செய்ததால் தம் மீது அந்த கன்னியாஸ்திரி பொய் புகார் அளித்துள்ளதாக பிஷப் தரப்பில் கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அது பொய் புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான நடைமுறைகளை போலீஸார் துவக்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories