கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!

church of india - 2026

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ்  கத்தோலிக்க சர்ச் விடுதியிலுள்ள 44 வயதுடைய கன்யாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் தன்னை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கன்யாஸ்த்ரீயை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து, இந்த வார இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிஷப் குருவிலாங்காடு விடுதிக்கு 13 முறை வந்து தங்கி உள்ளதற்கான ஆதாரமாக, அந்த விடுதியின் வருகைப் பதிவேடில் குறிக்கப் பட்ட குறிப்புகள் உள்ளன. அவ்வாறு பிஷப் வந்து சென்றதை விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்யாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர். அந்த கன்யாஸ்த்ரி பிஷப் குறித்து சர்ச் மேலிடத்தில் புகார் தெரிவித்த போது, மற்றவர்கள் சிரித்தபடி நகர்ந்தனராம். இதனால் அந்த பிஷப்புக்கு மேலும் தைரியம் வந்தது என்றும், நிர்வாகமும் பிஷப்புக்கு உடந்தையாக இருந்தது என்பதும் கன்யாஸ்த்ரியின் குற்றச்சாட்டு.

ALSO READ:  கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கன்யாஸ்த்ரி இதனிடையே தனக்கு வேறு சர்ச்சில் இடமாற்றம் செய்து தருமாறு கோரி, வேறு சர்ச்சுக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் வந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் அந்த கன்யாஸ்திரியை பலாத்காரம் செய்தாராம்.

இதனிடையே அந்த கன்யாஸ்திரியை தாம் பணியிட மாற்றம் செய்ததால் தம் மீது அந்த கன்னியாஸ்திரி பொய் புகார் அளித்துள்ளதாக பிஷப் தரப்பில் கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அது பொய் புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான நடைமுறைகளை போலீஸார் துவக்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

FIFA உலகக் கோப்பை கால்பந்து 2026: முதல் இரு சுற்றுகள்!

இரண்டாம் சுற்றான ரவுண்ட் 32 ஜூன் 28ஆம் தேதி தொடங்கி, ஜூலை 3ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.

பஞ்சாங்கம் ஜூலை 03 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ஸ்ரீ வைணவப் பேரறிஞர் ஏ.வி. ரங்காச்சாரி பரமபதித்தார்!

ஏ.வி.ஆர் ஸ்வாமியின் மறைவு ஒரு பொற்காலத்தின் முடிவைக் குறிக்கிறது. தில்லை திருச்சித்ரகூடமான சிதம்பரம் திருத்தலத்திற்கு அவர் ஆற்றிய கைங்கரியங்களும் அவரது நூல்களும் என்றும் நிலைத்து நின்று நல்வழிப்படுத்தும்.

Entertainment News

Popular Categories