December 5, 2025, 5:45 PM
27.9 C
Chennai

கன்யாஸ்திரி பலாத்காரம்; கைதாகிறார் பிஷப்!

church of india - 2025

திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கன்யாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிஷப் பிரான்கோ முல்லக்கல் என்பவர் கைதாகவுள்ளார். இது கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், கோட்டயம் குருவிலாங்காடு பகுதியில், மலங்காரா ஆர்தடாக்ஸ்  கத்தோலிக்க சர்ச் விடுதியிலுள்ள 44 வயதுடைய கன்யாஸ்திரி ஒருவர் ஜலந்தர் பிஷப் மீது கோட்டயம் மாவட்ட எஸ்.பி.,யிடம் ஒரு புகார் அளித்தார். அதில், 2014ஆம் ஆண்டு மே மாதம் குருவிலாங்காடு விடுதியில் வைத்து பிஷப் பிரான்கோ முல்லக்கல் தன்னை 13 தடவை பாலியல் பலாத்காரம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், கன்யாஸ்த்ரீயை பிஷப் பாலியல் பலாத்காரம் செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இதை அடுத்து, இந்த வார இறுதிக்குள் பிஷப் பிரான்கோவை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பிஷப் குருவிலாங்காடு விடுதிக்கு 13 முறை வந்து தங்கி உள்ளதற்கான ஆதாரமாக, அந்த விடுதியின் வருகைப் பதிவேடில் குறிக்கப் பட்ட குறிப்புகள் உள்ளன. அவ்வாறு பிஷப் வந்து சென்றதை விடுதியில் தங்கி உள்ள மற்ற கன்யாஸ்திரிகளும் உறுதி செய்துள்ளனர். அந்த கன்யாஸ்த்ரி பிஷப் குறித்து சர்ச் மேலிடத்தில் புகார் தெரிவித்த போது, மற்றவர்கள் சிரித்தபடி நகர்ந்தனராம். இதனால் அந்த பிஷப்புக்கு மேலும் தைரியம் வந்தது என்றும், நிர்வாகமும் பிஷப்புக்கு உடந்தையாக இருந்தது என்பதும் கன்யாஸ்த்ரியின் குற்றச்சாட்டு.

கன்யாஸ்த்ரி இதனிடையே தனக்கு வேறு சர்ச்சில் இடமாற்றம் செய்து தருமாறு கோரி, வேறு சர்ச்சுக்குச் சென்றுள்ளார். ஆனால் அங்கும் வந்த பிஷப் பிரான்கோ முல்லக்கல் அந்த கன்யாஸ்திரியை பலாத்காரம் செய்தாராம்.

இதனிடையே அந்த கன்யாஸ்திரியை தாம் பணியிட மாற்றம் செய்ததால் தம் மீது அந்த கன்னியாஸ்திரி பொய் புகார் அளித்துள்ளதாக பிஷப் தரப்பில் கோட்டயம் மாவட்ட எஸ்.பி., அரிசங்கரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அது பொய் புகார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதை அடுத்து, அவரைக் கைது செய்வதற்கான நடைமுறைகளை போலீஸார் துவக்கினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories