பர்வத மலை சிவன்மலையை – சிலுவை மலையாக அந்தோணியார் மலையாக மாற்ற முயற்சி நடத்தப் பட்டது முறியடிக்கப் பட்டுள்ளது! ஒன்றுபட்ட இந்து சக்தியால் சிலுவை அகற்றப்பட்டது. இதனை உடனே மேற்கொண்ட, வனத்துறை மாவட்ட நிர்வாகத்திற்கு இந்து மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ராம.ரவிக்குமார் தெரிவித்ததாவது…
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்து தென்மாதிமங்கலம் என்கின்ற கிராமத்தில் உள்ள சிவன்மலை பெயர் பருவதமலை . இது சுமார் 4,500 அடி உயரம் உள்ள இந்த மலையின் மீது அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது.
ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி தினத்தில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான சிவனடியார்கள் கிரிவலம் வந்து சிவபெருமானை தரிசனம் செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய சீனனந்தல் என்கின்ற பகுதியில் திடீரென யாருடைய அனுமதியும் இன்றி சிலுவை நடப்பட்டது .
இதை அறிந்து அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் ,சிவனடியார்கள் , இந்து இயக்க நண்பர்கள், இந்து இயக்கத்தவர்கள், என பல்வேறு தரப்பினரும் புகார் தெரிவித்தனர் .
இந்த நிலையில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி புதுப்பாளையம் அதிகாரிகள் நேரில் வந்து பார்த்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் யாரும் இந்த சிலுவையை நடவில்லை என தெரியவந்தது.
இதுகுறித்து சிலுவை அகற்ற முடிவு செய்து காவல்துறை பாதுகாப்பு கேட்டு அவர்கள் முன்னிலையில் சிலை அகற்றப்பட்டது. உடனே ஒரு சிலர் மறியல் செய்ய, அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அமைதியாக கலைந்து சென்றார்கள்.
சிவன்மலை சிலுவை மலையாக மாற்றி சென்னை அச்சிரப்பாக்கம் மலைபோல மதமாற்ற கேந்திரமாக மாற்ற முயற்சித்த கிறிஸ்தவ பாதிரியார்களிடமிருந்து
பருவதமலை பாதுகாத்திட்ட வனத்துறை ,மாவட்ட வருவாய் துறை, மற்றும் தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த பருவதமலை பாதுகாப்பு பணிக்காக எல்லா வகையிலும் ஒத்துழைப்பு தந்து ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்தி வெற்றி கண்ட அனைத்து இந்து இயக்க சகோதரர்களுக்கும் பாதம் பணிந்து என்னுடைய வணக்கங்களை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் திடீரென அந்தோணியார் குளம் என்று பேனர் வைத்து நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு செய்யக்கூடிய பாதிரிகளின் அயோக்கியத்தனத்தை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவனடியார்கள் இதற்காக போராட வேண்டும் என வேண்டுகோள் முன்வைக்கிறோம் .
இல்லையெனில் பக்தர்களை, பொதுமக்களை திரட்டி இந்து மக்கள் கட்சி தமிழகம் சார்பில் ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுப்போம் என உறுதி எடுக்கிறோம் .
வரக்கூடிய மார்கழி மாதம் ஒன்றாம் தேதி போற்றுதலுக்குரிய காஞ்சி மடத்து மாமுனிவர் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பருவதமலை கிரி வலம் செய்து வழிபாடு செய்வதற்கு வருகிறார்கள் .
இந்த மார்கழி ஒன்றாம் தேதி நடக்கக்கூடிய கிரிவலத்தில் அனைவரும் பங்கேற்று
இந்து சக்தியை, சிவசக்தியை வெளிப்படுத்துவோம்.! நஞ்சை உண்ட கண்டன்
சிவன்பிள்ளைகள் நாம் நயவஞ்சக கிறிஸ்தவர்களின் மதமாற்றம் நிகழ்ச்சியை,
மலை ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடிப்போம் – என்றார்.
Achiruppakkam issue cannot be given up, must be pursued further.
வாழà¯à®¤à¯à®¤à¯à®•à¯à®•à®³à¯.உடனே செயல௠படà¯à®Ÿà®®à¯ˆà®•à¯à®•à¯