February 23, 2026, 5:52 PM
29 C
Chennai

காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம் பெண் … தத்தெடுக்கும் முயற்சியில் நல்ல உள்ளங்கள்

.

IMG 20181211 WA0001 - 2026

ஸ்ரீபெரும்புதூர்: வேலூர் அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் இருந்து தப்பிவந்த இளம்பெண்ணை சோமங்கலம் போலீசார் மீட்டு வேலூர் மாவட்ட போலீசாரிடம் திங்கள்கிழமை ஒப்படைத்தனர்.

குன்றத்தூர் ஒன்றியம், நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சிலர் திங்கள்கிழமை சோமங்கலம் நிலையத்திற்கு வந்து இளம் பெண் ஒருவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

போலீசார் அந்த இளம்பெண்ணிடம் விசாரனை நடத்தியதில், அவரது பெயர் அம்பிகா(19) என்பவதும் பெற்றோரை இழந்த அவர் நடுவீரப்பட்டு பகுதியில் கடந்த 2012 ஆண்டு வரை தனியார் பள்ளி ஒன்றில் 5ம் வரை படித்துள்ளார். பின்பு வாணியம்பாடி அரசு பள்ளியில் 6}7ம் வகுப்புகளை படித்துவிட்டு பின்பு 8}9ம் வகுப்புகளை சிவானந்தா குருகுலத்தில் படித்துள்ளார்.

இதையடுத்து சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் சேர்க்கப்பட்ட அம்பிகாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 18 வயது எட்டியவுடன் வேலூர் பகுதியில் உள்ள அரசு மகளிர் இல்லம் காப்பகத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சென்னை கெல்லீஸ் காப்பகத்தில் இருந்து வேலூர் மகளிர் இல்லம் காப்பகத்திற்கு தையற் பயிற்சிக்காக வந்த ஷெர்லின் என்பவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அம்பிகா கடந்த 6ம் தேதி ஷெர்லினுடன் காப்பகத்தில் இருந்து தப்பி பஸ் மூலம் சென்னை வந்துள்ளார்.

இரண்டு நாட்கள் சென்னை கோயம்பேடு மற்றும் கடற்கரை பகுதியில் இருவரும் சுற்றி வந்துள்ளனர். இதைடுத்து கடந்த 8ம் தேதி ஷெர்லின் அவரது தோழியுடன் சென்றுள்ளார். இதையடுத்து தாம்பரம் வந்த அம்பிகா அங்கிருந்து நடுவீரப்பட்டுக்கு நடத்து வந்துள்ளார். அப்போது ஏற்பட்ட பசி மயக்கத்தின் காரணமாக மயங்கி விழுந்துள்ளார்.

இதை பார்த்த பெண்கள் சிலர் அம்பிகாவை நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள சீத்தாம்மாள் என்பவரது வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக தங்க வைத்துவிட்டு தற்போது காவல் நிலையத்தில் அம்பிகாவை ஒப்படைப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து வேலூர் பாகாயம் காவல் நிலைய போலீஸôரிடம் அம்பிகாவை சோமங்கலம் போலீசார் ஒப்படைத்தனர்.

இந்த நிலையில் நடுவீரப்பட்டு பகுதியில் அம்பிகா இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில், பெற்றோரை இழந்த அம்பிகாவை பிடித்து போன குழந்தையில்லாத நடுவீரப்பட்டு பகுதியை சேர்ந்த சிலர் அவரை தத்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

Topics

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகம் முழுதும்!

தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  எஸ்ஐஆர் பணி முடிந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும்

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories