திருச்சி: திருச்சி மாவட்டம் முசிறி அருகே அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனத்தில் மோடி விபத்து ஏற்பட்டதில், 3 பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் தேசியமங்கலம் அருகேயுள்ள வில்லுக்காரன்பட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 3 பேர், முசிறியில் கூலி வேலை செய்து விட்டு, இன்று அதிகாலை ஒரே இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பினர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நடைபெற்ற இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த முசிறி காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக உடல்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முசிறி அருகே விபத்து: 3 பேர் பலி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari