நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் மழை

Published:

சென்னை: நெல்லை மாவட்டத்தின் சில இடங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது. தென்காசி, செங்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் சனிக்கிழமை மாலை மழைபெய்தது. மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்: சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் கோவை மாவட்டம் வால்பாறையில் 70 மி.மீ, கன்னியாகுமரி மாவட்டம் இரணியலில் 30 மி.மீ, திருநெல்வேலி மாவட்டம் ஆயக்குடி, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 20 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மற்ற மாவட்டங்களைப் பொருத்தமட்டில் வறண்ட வானிலையே காணப்பட்டது. அடுத்த வரும் 24 மணி நேரத்தில், தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஞாயிற்றுக்கிழமையன்று தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

Related articles

Recent articles

spot_img