பள்ளி ஆண்டு விழா

Published:

keelapavoor: கீழப்பாவூர் சரகம் ராஜகோபாலபேரியில் உள்ள டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பாளையங்கோட்டை டி.டி.டி.ஏ தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி மேனேஜர் ஜேசுநேசபாண்டியன் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் ஜெபராஜ்ஞானசுவாமி, கீழப்பாவூர் உதவி தொடக்கக்கல்வி கூடுதல் அலுவலர் வனிதா தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சந்திரா வரவேற்றார். ஆசிரியை மரியதிரவியம் ஆண்டறிக்கை வாசித்தார், விழாவில் பள்ளி மாணவ மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர் மரியசெல்வம் நன்றி கூறினார்.

Related articles

Recent articles

spot_img