நம்மை இழிவு செய்யும் திமுக கூட்டணியை புறக்கணிப்போம்! வன்னிய இளைஞர்கள் அக்னிசபதம்!

vanniar support - 2026

வன்னியர்களின் குல தெய்வமான திரௌபதி அம்மனையும் , வன்னிய பெண்களையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இழிவாக பேசிவந்த நிலையில் அந்த கட்சியுடன் திமுக கூட்டணி வைத்திருப்பது வன்னிய சமூகத்தினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனை வெளிப்படுத்தும் விதமாக திமுக கூட்டணியை தோல்வியடையச் செய்வோம் என்று வன்னிய இளைஞர்கள் நெருப்பின் மீது சத்தியம் செய்து சபதம் ஏற்கும் நிகழ்ச்சி சென்னை பெரம்பூர் பழனியாண்டவர் கோயில் தெருவில் ஏப்.11 வியாழன் இரவு 8  மணிக்கு நடைபெற்றது. வன்னிய சத்திரிய சங்கத்தின் மாநில தலைவர்  அரங்க சண்முகம் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

அவர் திமுக.,வுக்கு எதிரான சபதங்களை முன்மொழிய வன்னியர்  சமூகத்தை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் அதனை வழிமொழிந்து சபதமேற்றனர்.

இந்து மதத்தை இழிவு செய்யும் திமுகவை புறக்கணிப்போம். 

சூரிய குல க்ஷத்ரியரான ராமரை நிந்தனை செய்த திமுகவை புறக்கணிப்போம் 

சந்திர குல  க்ஷத்திரியரான கிருஷ்ணரை இழிவு செய்யும் வீரமணியை ஆதரிக்கும் திமுகவை புறக்கணிப்போம் 

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

வன்னியர்களின் குல தெய்வம் திரௌபதி அம்மனை இழிவு செய்த திருமாவளவனை ஆதரிக்கும்  திமுக வை புறக்கணிப்போம் 

இந்து என்றால் திருடன் என்று தப்பு தப்பாய் அர்த்தம் சொன்ன கருணாநிதியின் திமுகவை புறக்கணிப்போம் 

இந்துக்களின் திருமண சடங்கை கொச்சைப்படுத்தும் முக ஸ்டாலினின் திமுகவை புறக்கணிப்போம் 

ஏழுமலையானை இழிவாக பேசிய கனிமொழியையும் திமுகவையும் புறக்கணிப்போம் 

  • என்று அவர்கள் முழக்கமிட்டனர். மேலும், நெருப்பின் மீது கைவைத்து சத்தியம் செய்த அவர்கள் திரௌபதி அம்மனையும் வன்னியர் பெண்களையும் இழிவு செய்த திமுக வை வேரோடு வீழ்த்த சபதம் ஏற்றனர்.

இந்நிகழ்வில் பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான வன்னியர்கள் கலந்துகொண்டு நெருப்பின் மீது கைவைத்து உணர்ச்சிமயமாக சபதம் செய்தனர்.

நிகழ்ச்க்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னிய சத்திரிய சங்க தலைவர் அரங்க சண்முகம், வன்னியர் உள்ளிட்ட பல சமுதாய பெண்களையும் திருமாவளவன் இழிவாக பேசியதை திமுக ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வியெழுப்பினார்.

ஒவ்வொரு வன்னியர் கிராமங்களிலும் கோயில் கொண்டிருக்கும் திரௌபதி அம்மனை திருமாவளவன் இழிவு படுத்தியபோதுட தி.க, திமுக இயக்கங்கள் அதனை கண்டிக்காது ரசித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.

ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

இஸ்லாமியர்களின் திருமண நிகழ்வில் கலந்துகொண்ட முக ஸ்டாலின் அங்கு இந்து மத திருமண சடங்குகளை இழிவுபடுத்தியதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

இந்து மதத்தையும் கடவுள்களையும் இந்து மத நம்பிக்கைகளையும் குறிப்பாக வன்னியர் சமூகத்தையும் கேலி செய்யும்   திமுக வை தோல்வியுற செய்வதற்காக இந்த அக்கினி சபதம் எடுக்கப்பட்டதாக அரங்க சண்முகம் கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories