தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை தேவை: அன்புமணி கடிதம்

சென்னை: தருமபுரியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக முதல்வருக்கு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தின் விவரம் பெறுநர்: திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், மாண்புமிகு தமிழக முதலமைச்சர், தலைமைச்செயலகம், சென்னை -09 அன்புள்ள முதலமைச்சர் அவர்களுக்கு… வணக்கம்! பொருள் : மத்திய அரசு நிதி உதவியுடன் தமிழ்நாட்டில் அமைக்கப்படவுள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனையை தருமபுரியில் அமைக்க நடவடிக்கை எடுக்கக் கோருதல் – தொடர்பாக. இந்தியாவில் தரமான மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவச் சேவையை பரவலாக்க வேண்டும் என்ற நோக்குடன் தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் எய்ம்ஸ் எனப்படும் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி, பெருந்துறை ஆகிய ஐந்து இடங்களில் ஏதேனும் ஒன்றில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைக்கலாம் என மாநில அரசு பரிந்துரைத்ததன் அடிப்படையில் அந்த இடங்களை மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து வருகிறது. தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைப்பதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருப்பதால் அங்கு இந்த மருத்துவக் கழகத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தருமபுரியில் சென்னை & பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அரசுக்கு சொந்தமாக 400 ஏக்கருக்கு அதிகமான நிலம் உள்ளது. இதன் மூலம் தமிழகத்திலுள்ள அனைத்து முக்கிய நகரங்களையும் எளிதிலும் விரைவாகவும் அணுக முடியும். குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகளும் இங்கு உள்ளன. தமிழகத்தின் மற்ற பகுதிகளை விட தருமபுரியில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை திட்டமிட்டு மேம்படுத்த முடியும். இதற்கெல்லாம் மேலாக தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தை அமைப்பதற்கான தேவைகள் அதிக அளவில் உள்ளன. தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அனைத்து மனித வாழ்நிலைக் குறியீடுகளிலும் தமிழகத்தின் 32 மாவட்டங்களில் தருமபுரி 32 ஆவது மாவட்டமாக உள்ளது. இங்கு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டால் இந்த மாவட்டத்தின் மீதான தோற்றம் மேம்படும். மருத்துவச் சுற்றுலாவுக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும், மருத்துவக் கல்வி பயில்வதற்காக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் இங்கு வருவார்கள். அதுமட்டுமின்றி மத்திய, மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கும். இதனால் தருமபுரி மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். பல வகையான தொழில்கள் தொடங்கப்படுவதுடன் அதன் மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கும். இது தருமபுரி மாவட்டத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் பெருமளவில் உதவியாக இருக்கும். தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் அமைக்கப்பட்டால் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்கள் பயனடைவார்கள். தருமபுரிக்கு அருகில் பெங்களூர் விமான நிலையம் இருப்பதால் இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்தும், உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் மருத்துவ வல்லுனர்கள் வந்து செல்வதற்கும் வசதியாக இருக்கும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைப்பதற்காக ஆய்வு செய்யப்படும் இடங்களின் பட்டியலில் ஆறாவதாக தருமபுரியையும் சேர்க்க வேண்டும். மத்திய அரசுக் குழுவினர் தமிழகத்தில் தங்கி இருப்பதால் மத்திய அரசுடன் பேசி தருமபுரியில் ஆய்வு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், அதனடிப்படையில் தருமபுரியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் மற்றும் மருத்துவமனை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக முதலமைச்சராகிய தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 5 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

Entertainment News

Popular Categories