தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் சோதனை! விளக்கம் அளிக்குமாறு சம்மன்!

kanimozhi house - 2026 துாத்துக்குடி: துாத்துக்குடி குறிஞ்சி நகரில் திமுக வேட்பாளர் கனிமொழி தங்கியிருக்கும் வீட்டில் 10 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி தொகுதியில் திமுக. வேட்பாளராகப் போட்டியிடும் கனிமொழி குறிஞ்சி நகர் பகுதியில் தங்கியிருந்து பிரசாரம் செய்து வருகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., மாநில தலைவர் தமிழிசை போட்டியிடுகிறார்.

கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. நாளை மறுநாள் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

இந்நிலையில் 10 பேர் கொண்ட வருமான வரித் துறை அதிகாரிகள் அடங்கியகுழு, கனிமொழி தற்போது தங்கி உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடத்தியது. வீடு, அலுவலகத்தில் உள்ளே, வெளியே செல்ல யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ரெய்டு நடக்கும் இடத்தில் திமுக மூத்த நிர்வாகிகள் உள்பட பலர் குவிந்தனர்.

மாவட்ட ஆட்சியரின் தகவல் அடிப்படையில் சோதனை நடத்தியதாக வருவாய்த் துறையினர் கூறினர்.

kanimozhi house3 - 2026

இதனிடையே, இந்த சோதனை குறித்து கனிமொழியின் சகோதரரும்  திமுக தலைவருமான ஸ்டாலின் கூறியபோது: கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்த புகார் அளித்தது யார் ? தேனியில் ஓ.பி.எஸ். மகன் வீடு, வீடாக பணம் பட்டுவாடா செய்துள்ளார். அங்கு ரெய்டு நடத்தாதது ஏன் ? தூத்துக்குடியில் பா.ஜ., தலைவர் தமிழிசை வீட்டில் கோடி,கோடியாக பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அங்கு சென்று ரெய்டு நடத்த வேண்டியதுதானே ? என்றார்.

இதனிடையே, தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு அடைந்தது.

kanimozhi house2 - 2026

இது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி, எதிர்க்கட்சியின் வேட்பாளராக இருப்பதாலேயே என் வீட்டில் சோதனை செய்ய வந்திருக்கிறார்கள்! சோதனைக்கு பிறகு நேரில் ஆஜராகுமாறு எனக்கு சம்மன் அனுப்பப்பட்டது!

சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை அவர்களின் ஆசை நிராசையாகிவிட்டது! இதுபோன்ற சோதனைகளுக்கெல்லாம் அஞ்சுகிற கட்சி திமுக இல்லை… தேர்தலை ரத்து செய்யும் நோக்கிலேயே இங்கு சோதனை நடத்தியிருக்கிறார்கள்!  … என்று  கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

Entertainment News

Popular Categories