கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் மணல் அள்ளுவதற்காகத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் தொழிலாளி இறங்கியபோது, மண் சரிந்து விழுந்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கிருஷ்ணகிரி அருகே படேதலாவ் ஏரியில் 25 அடி ஆழத்துக்குக் கீழே மணலை திருட்டுத்தனமாக எடுக்கும் வேலையில் மாலகுப்பம், கரடிகுறி, பூசாரிப்பட்டி, கல்லுகுறி பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கிருஷ்ணகிரி அருகே கரடிகுறி அருகிலுள்ள மாலகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி (45) நேற்று காலை மணல் எடுக்கும் வேலையில் ஈடுபட்டார். இதற்காக அங்கே தோண்டப்பட்டிருந்த 25 அடி ஆழ குழியில் கயிறு கட்டி உள்ளே இறங்கினார். குழிக்கு மேலே மணற்பரப்பில் 2 பேர் அவர் எடுத்துக் கொடுக்கும் மணலை வாங்குவதற்காக தயார் நிலையில் இருந்தனர். இந்நிலையில் திடீரென, அந்தக் குழியின் பக்கவாட்டில் உள்ள மண் முழுதாகச் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதை சற்றும் எதிர்பார்க்காத ராமசாமி அலறினார். ஆனால் அதற்குள் அவர் மண்ணில் புதைந்து மூச்சுத் திணறி உயிரிழந்தார். இதைக் கண்டு மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, மகராஜகடை காவல் நிலையத்துக்கு தொழிலாளர்கள் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸார் அங்கு விரைந்து வந்து, பொக் லைன் இயந்திரம் மூலம், குழிக்குள் மூடிக்கிடந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர், மண்ணுக்குள் புதைந்து கிடந்த ராமசாமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகராஜ கடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Less than 1 min.Read
மணல் அள்ளத் தோண்டிய 25 அடி ஆழ குழியில் மண் சரிந்து தொழிலாளி பலி
Hot this week
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
இந்தியா
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics
ஆன்மிகக் கட்டுரைகள்
ஸ்ரீராமன்; சரணாகதி சாஸ்திரத்தின் நாயகன்!
வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அசுரனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில். ஒரே சொல். ஒரே இல் என்பது ஸ்ரீராமனின் சிறப்பு!
இந்தியா
பெட்ரோல், டீசல் விலையேற்றத்தைத் தவிர்க்க மத்திய அரசு வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. ஈரான் போர் தாக்கத்தால் விலை உயர்வை தவிர்க்கும் வகையில், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 27 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...
ஆன்மிகச் செய்திகள்
திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது
கட்டுரைகள்
ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?
அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

