வருகின்ற மே மாதம் 7,8 மற்றும் 9 ந் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற இருக்கும் 57 வது மாநில ஜீனியர் கேரம் சாம்பியன்சிப் போட்டியில் பங்கு பெற சிறந்த அணியை தேர்வு செய்யும் பொருட்டு கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் தேர்வு போட்டி வருகின்ற 30.04.2015 பரணிபார்க் பள்ளியில் காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது. எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு கரூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு மாநில போட்டிக்கு தேர்வு பெறுமாறு கரூர் மாவட்ட கேரம் தலைவர் S.மோகனரெங்கன், தேர்வுக்குழு தலைவர் C.ராமசுப்பிரமணியன், செயலாளர் M.சுரேஷ் ஆகியோர் தொ¢வித்துள்ளனர். பங்கு பெற விரும்புவோர் 29.04.2015 க்குள் 9750991014 என்ற எண்ணில் தங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளவும்.

