நடிகை ஊர்வசி மது போதையில் தகராறு; சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

Published:

urvasi திருவனந்தபுரம்: இரு தினங்களுக்கு முன்னர் கேரள சட்டப் பேரவையில் பணி புரியும் இடதுசாரி தொழிற்சங்கத்தை சேர்ந்த மகளிர் ஊழியர் சங்கத்தின் ஆண்டு விழா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. சபாநாயகர் சக்தன், நடிகை ஊர்வசி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்த ஊர்வசி மது அருந்திவிட்டு, நிதானமிழந்த நிலையில் வந்துள்ளார். இதை அறியாத விழா பொறுப்பாளர்கள் மேடையில் ஊர்வசியைப் பேசுமாறு அழைத்துள்ளனர். ஆனால் அவர் போதையில் இருந்ததால் என்ன பேசுவதென்று தெரியாமல் மேடையில் உளறிக் கொட்டியிருக்கிறார். விழா நடத்துபவர் யார் என்று தெரியாத அளவுக்கு அவரது உளறல் இருந்ததால், இதைக் கேட்ட சபாநாயகர் சக்தன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவரை விழா மேடையிலிருந்து அப்புறப்படுத்தி காரில் ஏற்ற முயன்றனர். ஆனால் அவர் மேடையில் இருந்து இறங்க மறுத்ததோடு தொடர்ந்து விடாப்பிடியாக பேசியிருக்கிறார். பிறகு எப்படியோ அவரை ஒருவழியாக மேடையிலிருந்து இறக்கி காரில் ஏற்றி அனுப்ப முயன்றுள்ளனர். ஆனால் அவரோ காரில் ஏறாமல் விழா பொறுப்பாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதனிடையே ஊர்வசி மன அழுத்தத்தில் ஏதோ பேசியுள்ளார். இதை பெரிது படுத்த வேண்டாம் என மலையாள நடிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். [su_youtube url=”https://youtu.be/PU1jbmW4ObQ”]

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Related articles

Recent articles

spot_img