December 6, 2025, 1:11 PM
29 C
Chennai

சினிமா பாணியில் ரவுடியின் தாக்குதல்! தற்காப்புக்காக சுட்டுக் கொன்ற இன்ஸ்பெக்டர்! சேலத்தில் பரபரப்பு!

salem rowdy encounter - 2025

சேலத்தில் ரவுடி கதிர்வேல் என்பவர் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸார் மீது பயங்கர ஆயுதங்களால் தாக்கிய போது, தற்காப்புக்காக போலீஸார் சுட்டதில், ரவுடி உயிரிழந்தார்.

சேலம், வீராணத்தைச் சேர்ந்தவர் கதிர் வேல்! இவர் மீது 2 கொலை வழக்குகள், கொள்ளை மற்றும் ஆட்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் போலீஸார் கதிர்வேலைத் தேடி வந்தனர். மேலும், அண்மையில் காரிப்பட்டியைச் சேர்ந்த முறுக்கு வியாபாரி கணேஷ் என்பவர் கொடுக்கல் வாங்கல் தகராறில் கொலை செய்யப் பட்ட வழக்கிலும் கதிர்வேலுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது

இதை அடுத்து சேலம் காவல் உதவி ஆணையர் சூரிய முர்த்தி தலைமையிலான தனிப்படை போலீசார் அவரைத் தேடி வந்தனர். இந்நிலையில் கதிர்வேல் ரவுடிகள் சிலருடன் காரிப்பட்டியில் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் இன்று அதிகாலை காரிப்பட்டி ஆய்வாளர் சுப்ரமணி தலைமையில் போலீசார் அவர்களைப் பிடிக்கச் சென்றனர்.

அப்போது கதிர்வேல் உள்ளிட்டோர் ஆயுதங்களால் போலீசாரை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆய்வாளர் சுப்ரமணியும் உதவி ஆய்வாளரும் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில் தற்காப்புக்காக ஆய்வாளர் சுப்ரமணி துப்பாக்கியால் சுட்டதில் கதிர்வேல் உயிரிழந்தார். இதை அடுத்து அங்கிருந்த மூன்று ரவுடிகள் தப்பியோடினராம். அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories