இன்று திருவண்ணாமலை ரமணாஸ்மரத்தில் பகவான் ஸ்ரீ ரமணரின் 69ஆம் ஆண்டு ஆராதனை விழா மிக சிறப்பாக நடை பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பகவான் அருள் பெற்றனர்!
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ரமாணாச்ரமத்தில் ரமணரின் 69வது மகா ஆராதனை விழா நடந்தது. இதில் ரமணர் சந்நிதிக்கு வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப் பட்டிருந்தது.
சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகளைக் காண ஏராளமான ரமண பக்தர்கள் வந்திருந்தனர்.





