உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியலை தயார் செய்வதற்கான மாவட்ட தேர்தல் அதிகாரியை நியமித்தல், வாக்குச்சாவடி அமைத்தல், வாக்காளர் பட்டியல் இறுதி செய்தல் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையை மாநில தேர்தல் ஆணையத்திடமும் தமிழக அரசு சமர்பித்துள்ளது. அதில், மாவட்டம், ஊராட்சி ஒன்றியம், கிமார ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிக்க வலியுறுத்தியுள்ளது. இதேபோல வாக்குச்சாவடிகள் அமைக்கும்போது வாக்குச்சாவடி எண், வாக்குச்சாவடி பெயர், வாக்குச்சாவடி வகை ஆகியவற்றை உள்ளடக்கியிருப்பதை கருத்தில் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பதவிக்காலம் 2016 அக்டோபர் 24ஆம் தேதி முடிந்தது. இதிலிருந்து கடந்த மூன்று ஆண்டுகளாக தனி அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் இயங்கி வருகின்றன.



