ஷங்கர் என்னை முடக்கப் பார்க்கிறார்; நகைச்சுவை நடிகர் வடிவேலு கொந்தளிப்பு….!

vadivelu - 2026

என் கைவசம் பத்து படங்கள் இருக்கின்றன, ஆனால் என்னால் நடிக்க முடியிவில்லை என நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.

இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் இருந்து நடிகர் வடிவேலு திடீரென விலகியதால் அந்தப் படத்தை தொடர முடியவில்லை, இதனால் இயக்குநர் ஷங்கர், நடிகர் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் மூலம் நெருக்கடி கொடுத்து வருகிறார்.

வடிவேலு நடிக்க வர மறுக்கிறார் என ஷங்கர் புகார் அளிக்க வடிவேலுவுக்கு தகவல் அனுப்பி அவரை விசாரணைக்கு அழைக்கிறது தயாரிப்பாளர் சங்கம் ஆனால் அதையெல்லாம் துாக்கி ஓரம் போட்டு விட்டார் வடிவேலு.

இந்நிலையில் அவர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது.
படங்களில் ஆக்ஷ்னுக்கும், காமெடிக்கும் எந்தத் தொடா்பும் கிடையாது,

ஆனால் ஆக்ஷ்னையும், காமெடியையும் இணைத்துப் பார்த்து, அதன்படி என்னை இம்சை அரசன் 24ஆம் புலிகேசியில் நடிக்கச் சொன்னார்கள்

நான் மறுத்து விட்டேன் படத்தில் மூன்று கேரக்டர்களில் நான் நடிக்கிறேன் அப்படி இருக்கும் போது, என்னுடைய யோசனைகள் இல்லாமல், துளி கூட படத்தை அடுத்த கட்டத்திற்கு நகா்த்த வாய்ப்பே இல்லை.

ALSO READ:  இலக்கியச் சாரலின் மனங்களை வென்ற காவியக் கன்றுகள்!

sankar dr - 2026

படத்தில் கூட யாரையும் கொல்வதற்கு விட மாட்டேன் இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படத்தில் என்னுடைய மாமாவாக நடித்திருப்பார் நாசர் அவரை படத்துக்காக நான் கொல்ல வேண்டும் அதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால், அதை செய்ய நான் மறுத்துவிட்டேன்.

வேறு காட்சி படமாக்கப்பட்டது. இப்படி சினிமாவில் கூட யாருக்கும் துன்பம் இழைக்கக் கூடாது என நினைக்கும் நான் நிஜத்தில் யாரும் கெட்டுப் போக வேண்டும் என்று நினைப்பேனா.

24ஆம் புலிகேசி படம் தொடா்பாக வாங்க பேசலாம் என நடிகர் சங்கமும், தயாரிப்பாளா் சங்கமும் என்னை கூப்பிடுகிறது.

நான் ஏன் செல்ல வேண்டும்? என்னைப் பிரச்னை என்றாலும் தயாரிப்பாளரோ, இயக்குநரோ என்னிடம் நேரில் பேசித்தானே சரிசெய்ய முடியும்.

என் கையில் இப்போது பத்து படங்கள் உள்ளன. ஆனால் இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் சங்கமும் என்னை நடிக்க விடாமல் நெருக்கடி கொடுத்து என்னை முடக்கி உள்ளனா். இவ்வாறு வடிவேலு கொந்தளிக்கிறார்.

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Topics

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories